|
4 |
|
துளு |
|
துளு வியல்பு: குடகுக்கு மிகநெருங்கி, கன்னடத்தினின்று சிறிதும் மலையாளத்தினின்று பெரிதும் வேறுபட்டுத் திருந்திய திரவிட மொழிகளுள் ஒன்றாய், தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என்னும் நான்கிற் கடுத்தாற்போற் சொல்லத்தக்கது துளுவாகும். |
|
துளுவிற்குத் தனியெழுத்தும் தனி அல்லது பழைய இலக்கியமுமில்லை. மங்களூர்ப் பேசெல் (Basel) விடைத் தொண்டரால் கன்னடவெழுத்திலும், துளுவப் பார்ப்பனரால் மலையாளவெழுத்திலும் துளு எழுதப்பட்டுவருகின்றது. |
|
துளு வழங்கெல்லை: மேல்கரை நாட்டில் கன்னடத்திற்குத் தெற்கில், சந்திரகிரி கல்யாணபுரி ஆறுகட்கிடையில், பெரும் பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது துளு, |
|
துளுவநாட்டு வரலாறு: கொடுந்தமிழ் நாடுகளைப்பற்றிய, |
|
  |
|
"சிங்களஞ் சோனகஞ் சராவகஞ் சீனந் துளுக்குடகம்" | "கொங்கணத் துளுவங் குடகம் கன்னடம்" (நன். மயிலை) |
|
|
  |
|
என்னும் பழஞ் செய்யுள்களில் துளுவுங் கூறப்பட்டிருப்பதால், கொங்கணம் கன்னடம் குடகு முதலிய நாடுகளைப்போன்றே, துளுவநாடும் பழைமையான தென்றறியலாம். ஆயினும், துளுவ நாட்டுக் கொடுந்தமிழ் கிளைமொழியாய்ப் பிரிந்து போனது 16ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே யென்பதை உணர்தல் வேண்டும். |
|
துளுவநாட்டிலிருந்து பல நூற்றாண்டிற்கு முன்னரே வேளாளர் பலர் தொண்டைமண்டலத்திற் குடிவந்தனர். அவர் தொண்டைமண்டலம் துளுவவேளாளர். அவர் மொழி தொன்று தொட்டுத் தமிழே. |