|
இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? (தமிழ்) |
|
பாயிடு மக மக பஞ்சிடு பக பக = வாயில் மகன் மகன் வயிற்றில் பகை பகை. |
|
உதட்டில் உறவும் உள்ளே பகையும் (தமிழ்). |
|
பெரிகு பூரி பெட்டுலா கர்பொகு கொரி நீருலா பிர பருவா? = பிறக்கு (முதுகு) விழுந்த அடியும் இரும்பு கொண்ட நீரும் பிறகு (திரும்ப) வருமா? |
|
மாதிக இல்லுடு உணசு ஆண்ட ப்ராணகு தானெ? = பறையன் இல்லில் உணவானால் பார்ப்பானுக்கு (பிராமணனுக்கு) என்ன? |
|
துளுத் திரியக் காரணங்கள் |
|
1.தட்ப வெப்பநிலை. |
|
2.இலக்கண நூலின்மை. |
|
3.தமிழரொடு தொடர்பின்மை. |
|
4.துளுவர் தமிழ்நூலைக் கல்லாமை. |
|
5.வடசொற் கலப்பு. |
|
6.ஒலிமுறைச் சோம்பல். |
|
துளுத் திரிந்த வகைகள் |
|
(1) | ஒலித்திரிபு | | எ-டு: ழ-ள, கூழ்-கூளு, ச-ஐ, பாசி-பாஜி | (2) | போலி | | எ-டு: ஐ-எ, காடை-காடெ; ழ-ர, கோழி-கோரி; | | வ-ப, வேலை-பேலெ. | (3) | சொற்றிரிபு | | எ-டு: பன்றி - பஞ்சி, ஆறு - ஆஜி. | (4) | ஈறுகேடு | | எ-டு: (குசவன்) குசவெ - இருபது - இர்வ. | (5) | இலக்கணப் போலி | | எ-டு: யாவது - தாதவு. |
|