|
| சேரமான்பெருமாள் செய்யுள், நம்பியாரூரர் தேவாரம், குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி என்னும் சேரநாட்டுச் செந்தமிழ் நூல்களாலும், அந் நாட்டுக் கல்வெட்டுகளாலும், செப்புப்பட்டயங்களாலும், மலையாள நூல்களாலும் அறியலாம். |
| |
|   |
| |
| "வடவேங்கடந் தென்குமரி | ஆயிடைத் - | தமிழ் கூறு நல்லுலகத்து" |
|
| |
|   |
| |
| என்று பனம்பாரனாரும். |
| |
|   |
| |
| "வடக்குந் தெற்குங் குடக்குங் குணக்கும் | வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் | றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த | நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்" |
|
| |
|   |
| |
| என்று காக்கைபாடினியாரும், |
| |
|   |
| |
| "வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் | தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் | வரைமருள் புணரியொடு பொருது கிடந்த | நாட்டியல் வழக்கம்" |
|
| |
|   |
| |
| என்று சிறுகாக்கைபாடினியாரும், |
| |
|   |
| |
| "வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் | றிந்தான் கெல்லை தமிழது வழக்கே" |
|
| |
|   |
| |
| என்று சிகண்டியாரும், |
| |
|   |
| |
| "தென்குமரி வடபெருங்கல் | குணகுடகட லாவெல்லை" |
|
| |
|   |
| |
| என்று குறுங்கோழியூர்கிழாரும், |
| |
|   |
| |
| "நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந் | தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு" |
|
| |
|   |
| |
| என்று இளங்கோவடிகளும், இவ் வடிகளின் உரையில், "வடதிசைக்கண் வடுகொழிந்த திரிபுடைமொழி பலவுளவாக லான் மலையெல்லை கூறி ஒழிந்த திசை மூன்றிற்கும் திரிபின்மையாற் கடலெல்லை கூறினாரெனினு மமையும்" என்று அடியார்க்கு நல்லாருங் கூறியிருத்தலால், தொல்காப்பியர் காலத்தில் கன்னடந் |