பக்கம் எண் :

18திரவிடத்தாய்

திரவிடத்தாய்

தோன்றவும் பெறும். பொதுவாக, சுமார் 500 கல் தொலைவாயின் புதுச் சொற்கள் தோன்றுவதும் மொழி திரிவதும் இயல்பு.
 
(2) எழுத்தொலித் திரிபு
 
இது தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும் சோம்பலாலும் நிகழ்வது .
 
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு
 
ந - ஞ
ப - ஹ
ழ - ட - தட்பவெப்பநிலை
ஐ - அ
ஐ - எ
ண - ன - சோம்பல்
 
இனி ஊண், தொழில், பழக்கவழக்கம், அயன்மொழிக் கலப்பு முதலியவற்றாலும் எழுத்தொலி திரியும். எழுத்தொலித் திரிபு தட்பவெப்பநிலை ஊண் முதலியவற்றால் திரிவது கிளைமொழியாக்கத் (Dialectic variation)திற்குக் காரணமாம்; சோம்பலால் திரிவது ஒலிமுறைக் கேடாம் (Phonetic decay).
 
(3) சொல் திரிபு
 
(4) பொருள் திரிபு
 
எ-டு:
வெள்ளம் (த.) = வெள்ளையான புதுப்பெருக்கு நீர்; வெள்ளம் (ம.) = நீர்.
 
(5) இயற்கைத் தெரிப்பு (Natural Selection)
தாய்மொழியாகிய தமிழில் வீட்டைக் குறிக்கும் ஒருபொருட் பல சொற்களில், தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மன என்னுஞ் சொல்லையும் தெரிந்துகொண்டன.
(6) வழக்கற்ற சொல் வழங்கல்
 
எ-டு:
துன்னு = தை, (ம.), தெவு = தெகு(க.). நெய்த்தோர் = நெத்துரு (தெ.)
 
வழக்கற்ற சொல் வழங்கலாவது தமிழில் இதுபோது பேச்சுவழக்கற்று எழுத்துவழக்கில் மட்டுமுள்ள சொற்கள் பிற திரவிட மொழிகளிற் பேச்சு வழக்கில் வழங்குவது.