பக்கம் எண் :

சிலை என்னுஞ் சொல் வரலாறு95

இன

இனி, சிலை என்பது சிலம்பு என்பது போல் மலை என்றும் தமிழில் பொருள் கொண்டிருப்பதால், மலை என்னும் பொருளினின்றே கல் (மலைப்பிஞ்சு) என்னும் முதலாகுபெயர்ப் பொருளும் தென்மொழியிலும், வடமொழியிலும் தோன்றிற்று என்று கொள்ளவும் இடமுண்டு.

    சிலை = மலை - "வணங்காச் சிலைஅளித்த தோளான்" (பு.வெ.2:12)

    சிலை = கல் (பிங்க.)

    ஆகவே, சிலை என்னும் உருவப்பொருட் சொற்குத் தமிழ் மூலம் சற்று வலிந்து கொள்வதாகவே இருப்பினும், பின்வரும் ஏதுக்களால் அதைத் தென்சொல் என்று கொள்ளவும் இடமுண்டு.

  1. வடமொழியில் சிலை என்னும் சொற்கு மூலமில்லை.
  2. அம் மொழியில் அச் சொற்குக் கற்பொருளேயன்றி உருவப் பொருளில்லை.    
    தமிழில்இரண்டுமுண்டு.
  3. ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்பே தமிழகத்தில் உருவக் கலை இருந்தது.
  4. வடமொழியில் குறைந்தபக்கம் ஐந்திலிரு பகுதி தென்சொல். (என் 'வடமொழி வரலாறு' பார்க்க.)
 
  5. உருவம், படிமை என்னும் தென்சொற்களும் வடசொல்லாகக் காட்டப்படுகின்றன. அவை போன்றே சிலை என்பதும்.
 
  6. வேத ஆரியர்க்கு வேள்வி வழிபாடேயன்றி உருவ வணக்கமில்லை. தென்னாடு வந்தபின்னரே தமிழரிடமிருந்து மேற்கொண்டனர்.
 
  7. சிலா என்னும் வடசொல்லில் இருமொழிப் பொதுவெழுத்தே யன்றி வடமொழிச்
    சிறப்பெழுத்தில்லை.
  8. தமிழ் ஐகாரவீறு வடமொழியில் ஆகார ஈறாய்த் திரிவது இயல்பே. எ-டு: மாலை - மாலா; வடை- வடா.
 
  9. சிலா என்னுஞ் சொல் இருக்கு வேதத்திற்குப் பிற்பட்ட வடநூல்களிலேயே ஆளப்பட்டுள்ளது.
 
  10. சிலம்பு, சிலை என்னும் இரு (மலைப்பொருட்) சொற்களும், தமிழில் சில் என்னும் ஒரே மூலத்தையும், ஒலித்தல் என்னும் ஒரே வேர்ப்பொருட் கரணியத்தையும் கொண்டுள்ளன.
 
 
  11. தமிழ் மேலை ஆரியத்திற்கும் அடிப்படைச் சொற்களை உதவிய பெருவளமொழி.
 

- நாகைத் தமிழ்ச்சங்க மறைமலையடிகள்

நினைவு மலர் 1969