என் தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்?
நான் வடார்க்காடு மாவட்ட ஆம்பூரில் மிசௌரி
நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M)
நடுநிலைப் பள்ளியிற் படிப்பு முடித்த பின், நெல்லை
மாவட்டப் பாளையங்கோட்டையில் திருச்சவை
விடையூழியக் கூட்டரவு (C.M.S)
உயர்நிலைப் பள்ளியிற் பள்ளியிறுதிக்
கடவைக்குச் சேர்ந்து, 4ஆம் படிவத்தில் பூதநூல்
உடல்நூல் நிலைத் திணை நூல் (Botany)
தொகுதியையும், 5ஆம் படிவத்தில் சுருக்கெழுத்து
தட்டச்சு கணக்கு வைப்புத்
(Book-keeping)
தொகுதியையும், 6ஆம் படிவத்தில் வரலாறு தமிழ்த்
தொகுதியையும், சிறப்புப் பாடமாக எடுத்துப்
படித்தேன். அன்று ஆங்கிலப் பற்றாளனாகவும் பேச்சாளனா
கவும் மாணவர் (ஆங்கில) இலக்கிய மன்றச் செயலாளனாகவும்
இருந்த தனால், ஆங்கில இலக்கியத்தைக் கரை
காணவும், ஆக்கசுப்போர்டு (Oxford)
என்னும் எருதந் துறையிற் பணி
கொள்ளவும் விரும்பினேனா யினும்; இறுதியில்
தமிழ் கற்றதினாலும், இசைப்பாட்டும் செய்யுளும்
இயற்றி வந்ததனாலும், இசைத் தமிழ்ப் பித்தனானதனாலும்
நான் அறியாவாறு இறைவன் என் மனப் பாங்கை
மாற்றியதனாலும், நான் கற்ற ஆம்பூர்ப்
பள்ளியிலேயே, அது உயர்நிலைப்பள்ளியாக வளர்ச்சி
யுற்றிருந்தபோது, உதவித் தமிழாசிரியனாக 1921ஆம்
ஆண்டில் அமர நேர்ந்தது. அதன்பின், அப் பதவிக்கும்
தலைமைத் தமிழாசிரியப் பதவிக்கும் முழுத் தகுதி
பெறுமாறு, 1924ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப்
பண்டிதத் தேர்வெழுதித் தேறினேன். அதனால்
எழுந்த செருக்கினாலும் தமிழ்வெறியினாலும்,
ஆங்கிலத்தை அறவே புறக் கணித்து நான் ஆங்கிலம்
பேசக் கூடாதென்றும் பிறர் பேசின் செவி மடுக்கக்
கூடா தென்றும், சூளிட்டுக்கொண்டேன். அம் மயக்குப்
பத் தாண்டு தொடர்ந்தது. அதனால், தமிழாராய்ச்சியில்
ஆழ முழுகித் தமிழின் அடிமட்டத்தைக் கண்டேனாயினும்,
ஆங்கிலப் பேச்சாற்றலை இழந்து விட்டதனால்,
ஆங்கிலப் பட்டம் பெறும் வரை கல்லூரியுட்
கால்வைக்க முடியாது போயிற்று. அதனாற் பதவியுயர்வும்
பொருளியல் முன்னேற்றமும் இல்லாதுபோயின.
1938-ல் நான் திருச்சிராப்பள்ளிப் புத்தூர்
ஈபர் மேற்காணியார் (Bishop
Heber)
உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியனாக
இருந்தபோது, திரு (C)
அரசகோபாலாச்சாரியார் தமிழ்நாட்டு முதலமைச்சராகி,
இருநூறு உயர்நிலைப்
பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப்
புகுத்தினார். உடனே தமிழர் எதிர்ப்பு எழுந்தது.
இந்தி புகுத்தப்பட்ட பள்ளி |