|
தமிழிலே சொல் உண்டா, இல்லையா, என்பதற்கு
முதலில் எதை அறியவேண்டும்? சென்னைப் பல்கலைக்கழக
அகரமுதலியிலுள்ள சொற்களை எல்லாம் முதலில் அறிந்து
கொள்ள வேண்டும். அதில் இல்லாத சொற்களும் பல
இருக்கின்றன. உலக வழக்கில், அதற்கப்புறம் சொல்
உண்டா, இல்லையா என்பதைப் பிறகு அறிய வேண்டும். சென்னைப்
பல்கலைக்கழக அகரமுதலிதான் நமக்கு முதல் படியாக
இருந்து உதவ வேண்டும். இப்படிப்பட்ட அகரமுதலி,
யாரால் தொகுக்கப் பட்டது, எப்படிப் பட்டது என்பது
தெரியுமா? தமிழ் நலம் கருதாதவரால் தொகுக்கப்பட்டது
அந்த அகரமுதலி. பணம், தமிழ்ப்பணம்; மொழி தமிழருடையது;
நாடு தமிழருடையது. யானையைக் கட்டித் தீனி போட்டது
போல 29 ஆண்டுகள் அது நடந்தது. கடைசியில் பல தமிழ்ச்
சொற்கள் அதில் இல்லவே இல்லை. இப்பொழுது "நீல்"
என்பது நிறவடிவம்; நீன் என்பதுதான் முந்தின வடிவம்.
திருநெல்வேலியிலே வழங்குகிறது. ஆனால் இச்சொல்
அதிலே இல்லை. வெளிப்படை யாகவும், பச்சையாகவும்
நான் சொல்ல விரும்புகிறேன். இல்லாவிட்டால், உங்களுக்கு
அது சரியாக விளங்காது. அதிலே தலைமையாக இருந்த ஆசிரியர்
மு. இராகவய்யங்கார். அவர் தமிழ் அன்பர் என்று நான்
கொள்ளவில்லை. ஆனால் அவர் என் பழைய நண்பர்தாம்.
அவர் தொல்காப்பியத்திலே ஐயர் என்ற
சொல்லுக்கு-ஐயர் யாத்தனர் கரணம் என்பதற்கு-ஆரிய
மேலோர் என்று எழுதினாரே அது ஒன்றே போது மானது. நான்
"யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்ற கொள்கை யுடையவன்.
ஆனால், கேளிர் என்றால் எனக்குக் கேளிராக இருக்க
வேண்டுமே தவிர வாளிராக இருக்கக் கூடாது; வாட்களாக
இருக்கக் கூடாது. நாம் அவர்களைக் கேளிராகக் கருவது
போல அவர்கள் நமக்குக் கேளிர்களாக இருக்க வேண்டும்.
ஆப்பிரிக்கனாக இருந்தா லும் சரி; ஆத்திரேலியனாக
இருந்தாலும் சரி; இங்கே வந்து தமிழைக் கற்று உண்மையிலேயே
தமிழனாக இருந்தால் நாம் அவனைத் தமிழனாகத்தான்
போற்ற வேண்டும். பரிதிமாற் கலை ஞர் பிராமணராக
இருந்தாலும் அவர் தூய தமிழர். மறைமலையடி களுக்கும்
அவர்க்கும் நான் கடுகளவும் வேற்றுமை காட்டுவதேயில்லை.
ஆனால் போலித் தமிழராக இருந்தால் அவர்களைத்
தமிழர்களுக்குப் புறம்பாகத்தான் வைத்திருக்கிறேன்.
நமக்கு குலம் வேண்டுவது கருத் தன்று. இந்தக் காலத்திலே
குலத்தை ஒட்டிப் பிரிக்க முடியாது. ஏனென் றால் எந்த
நாட்டிலும் குலம் கலந்துதான் கிடக்கிறது. ஆனால்
மனப் பான்மை பற்றித்தான் நாம் ஒருவரை வேறுபடுத்த
வேண்டும், அவர் தமிழரா அல்லரா என்பதை.
உண்மைத் தமிழன் என்று சொன்னால்
யாராயிருக்க வேண்டும்? நான் தமிழன் என்று
சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. ஒருவன் தமிழிலே
பேசுவது மட்டும் போதாது. அவன் முன்னோர் மொழியை
இழந்திருப்பான். அவன் முன்னோர் மொழி பேச்சு
வழக்கற்றிருக்கும். தமிழ் நாட்டிலிருந்தால்
|