|
கண்டுகொண்டார்கள். தமிழருக்கு
இயல்பாய் அமைந்த பழங்குடிப் பேதைமை,
சமயப்பித்து (Religious
fanaticism) கொடைமடம் (Indiscriminate
munificence) ஆகிய தன்மைகளைத் தங்கள்
முன்னேற்றத் திற்குக் கருவியாகப் பயன்படுத்திக்
கொண்டார்கள்.
முதலில் அரசர்களைச் சார்ந்து,
அவர்களை வயப்படுத்தினர். பின்னர் அவர்கள்
உதவியால் படிப்படியாகப் பொதுமக்களை வயப்
படுத்தினர். இவ்வாறாக, முதலில் சமயத்துறையில்
தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி, பிறகு
அரசியலிலும் காலூன்றத் தொடங்கினர்.
ஆனால், இந்தச் சமயங்களில் எல்லாம்
தமிழ்ப்புலவர்கள் வாளா இருந்துவிடவில்லை.
அவ்வப்போது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தே
இருக்கிறார்கள். ஆரியர் வருகையால் தமிழர்க்கு
நேர்ந்த தீமைகளைக் கண்டு அஞ்சியே திருவள்ளுவர்
திருக்குறளை எழுதினார்.
என்றாலும், பொதுவாகத் தமிழர்கள்
ஆரியர்களைத் தங்கள் பகைவராக என்றுமே
கருதியதில்லை. அவர்கள் இந்த நாட்டிற்கு வந்த
காலந் தொட்டு அவர்களைத் தங்கள்
உடன்பிறந்தவர்களைப் போல அன்பாகவே நடத்தி
வந்திருக்கின்றனர். அவர்களை அயலாராக எண்ணி
வெறுக்கவோ, விலக்கவோ இல்லை. "யாதும் ஊரே
யாவரும் கேளிர்" என்ற பரந்த மனப்
பான்மையுடனேயே பழகி வந்துள்ளனர். இருந்தும்கூட,
பிராமணர்கள் அவர்களைத் தங்களைச்
சார்ந்தோராகக் கருதாமல் ஒதுங்கியே வாழ்ந்து
வந்துள்ளனர். இதனாலேயே நாம் அவர்களைத்
தமிழர்கள் என்று ஒத்துக் கொள்ளமுடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இன்றும் கூட, எல்லாவகையிலும்
தமிழின் சிறப்பை ஒழிக்க நினைக்கும் அவர்கள்
இயல்பும், புறம் நட்டு அகம் வேர்க்கும் நச்சுத்
தன்மையும் அவர்களை இன்னாரென்று நமக்கு எளிதில்
புலப் படுத்தி விடுகின்றன!
இஃது ஒருபுறம் இருக்க, மேனாட்டார்
தமிழின் மேன்மையையும் தமிழரின் பழைய
பெருமையையும் உணரமுடியாமல் இருப்பதற்கு, இன்றைய
தமிழரின் தாழ்ந்த நிலையும் ஒரு காரணம் ஆகும்.
இவர் களைக் காணும் ஆங்கிலேயர்கள்,
இத்தகையவர்களின் முன்னோர்கள் எப்படிச்
சிறந்த நாகரிகம் உடையவர்களாகத்
திகழ்ந்திருக்கக்கூடும் என்று ஐயுறுகிறார்கள்.
உண்மையைச் சொல்வதானால் பல நூற்றாண்டு களாகத்
தாழ்ந்த நிலையில் இருந்த ஆப்பிரிக்கர்கள்
உயர்ந்துள்ள அளவிற்குக்கூட நம் தமிழர்கள்
உயரவில்லை எனலாம். இதற்குக் காரணம் ஆரியப்
பார்ப்பனர்களே யாவர். இவர்கள் தமிழர்களின்
உள்ளத்திலிருந்து பகுத் தறிவு, தன்மானம்,
நெஞ்சுரம் ஆகிய மாந்தன் வளர்ச்சிக்கு
இன்றியமையாத மூன்று இயல்புகளையும் அறவே அகற்றி
விட்டனர். இறைவனையும் விதியையும்
காரணமாகக்காட்டி, தமிழர்களின்
முன்னேற்றத்தைத் தடை செய்துவிட்டனர்.
|