| கள் (பன்மையீறு)-க-க தமிழ் துடவம் (நீலமலைவாணர் மொழி) மகன் மக் மண்டை மட் முள்-மள்-மழ-மக-மகன்-மக். மொள்-மொண்டை(மொந்தை)-மண்டை-மண்ட்-மட். (6) வாய்ப்பயிற்சியால் எல்லா மொழியொலிகளையும் ஒருவர் பயின்று கொள்ளலாம் என்பது. |
சில மொழியொலிகள் அயல்நாட்டு மக்களால் ஒலிக்க இயலாமையால், அவற்றை அவை வழங்கு நாடுகளிற் பல்லாண்டோ சில தலைமுறையோ குடியிருந்துதான் பயிலமுடியும். ஓர் அமெரிக்கர் சென்னையில் அண்ணாமலைநகருக்குப் புகை வண்டிச் சீட்டு வாங்க வேண்டியவர் தவறாக ஒலித்ததனால், ஆனைமலக்கு வாங்கிச் சென்றுவிட்டார். |
முத்திற மொழிநூல்போல் வண்ணனை மொழிநூற்குப் போதிய ஆராய்ச் சிக்கிடம் இன்மையாலேயே, இத்தகைய இழிதகைய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இது ?வேலையில்லாத மஞ்சிகன் (அம்பட்டன்) வெண்கழு தையைப் பிடித்துச் சிரைத்தானாம்? என்னும் பழமொழியையே நினை வுறுத்துகின்றது. |
7. அயன்மொழிச் சொற்களுள் சிலவற்றின் வடிவுகொண்டு, பிறவற்றின் வடிவையும் ஒத்தமைவு (Analogy) முறையில் அமைத்துக் கொள்ளலாம் என்பது. இலக்கண வகையில் ஒத்தசொற்கள் பொதுவாக ஓரொழுங்கு பட்டிருப்பினும், சிறுபான்மை நெறிக்கு விலக்காகவு மிருப்பதால், ஒத்தமைவுமுறை எல்லாவிடத்துஞ் செல்லாததாகும். |
சொற்புணர்ச்சி |
| எ-டு: வலிமிகல் மெலிமிகல் வாழைப்பூ தாழம்பூ (தாழை+பூ) அவரைக்காய் துவரங்காய் (துவரை+காய்) புன்னைத்தோப்பு தென்னந்தோப்பு (தென்னை+தோப்பு) இறந்தகால வினையெச்சம் சொல்-சொல்லி தெள் - தெள்ளி நில் - நின்று கொள் - கொண்டு வில் - விற்று கள் - கட்டு |