ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தெனச் சீரிய மறைமலை செந்தமிழ் உணர்த்தவிட் டோரின மாயர சுறுந்தமி ழினமே.குமரி நிலமொழியைக் கூறுந் தமிழன் குமரி வரலாறு கொண்டே - குமரித் தமிழையுந் தன்னையுந் தாங்கித்தற் காக்கும் அமரிலும் வெல்லும் அறி. பண்பட்ட செந்தமிழாற் பைந்தமிழா முன்னேறக் கண்கொட்டுங் காலுங் கவலையுறேல் - புண்பட்டும் மாறா யிருப்பவெலாம் மாற்றிப் புரட்சிசெயச் சூறா வளிபோற் சுழன்று. வண்ணனைக் கூற்று வழூஉ மொழியியலை விண்ணவர் போற்றினும் வேண்டற்க - எண்ணிப் பகுத்தறிவா லந் நூல்செய் பைந்தமிழ்க் கேட்டை வகுத்தவர லாற்று வழி. முப்பல் கலைக்கழக முட்டாத் தமிழ்த்துறையும் செப்புத் தனித்தமிழர் சேர்ந்திடுக - தப்பின் அடியோடு முக்கழகும் ஆரியம் நீங்கி முடிசூட முத்தமிழ் முந்து. |