பக்கம் எண் :

மொழிநூல்127

வாழ்ந்து ("When you are at Rome, do as Rome does.") நக்கீரரும் பரிதிமாற் கலைஞனாரும்போல் தூய தமிழராகித் தமிழை வளர்த்து, உடன் பிறப்புப் போல் உளமொத்து என்றென்றும் இன்புறுவாராக.
  ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தெனச்
சீரிய மறைமலை செந்தமிழ் உணர்த்தவிட்
டோரின மாயர சுறுந்தமி ழினமே.

குமரி நிலமொழியைக் கூறுந் தமிழன்
குமரி வரலாறு கொண்டே - குமரித்
தமிழையுந் தன்னையுந் தாங்கித்தற் காக்கும்
அமரிலும் வெல்லும் அறி.

பண்பட்ட செந்தமிழாற் பைந்தமிழா முன்னேறக்
கண்கொட்டுங் காலுங் கவலையுறேல் - புண்பட்டும்
மாறா யிருப்பவெலாம் மாற்றிப் புரட்சிசெயச்
சூறா வளிபோற் சுழன்று.

வண்ணனைக் கூற்று வழூஉ மொழியியலை
விண்ணவர் போற்றினும் வேண்டற்க - எண்ணிப் பகுத்தறிவா லந்
நூல்செய் பைந்தமிழ்க் கேட்டை
வகுத்தவர லாற்று வழி.

முப்பல் கலைக்கழக முட்டாத் தமிழ்த்துறையும்
செப்புத் தனித்தமிழர் சேர்ந்திடுக - தப்பின்
அடியோடு முக்கழகும் ஆரியம் நீங்கி
முடிசூட முத்தமிழ் முந்து.

(முற்றும்)