(1) "ஊர்க்கரையாளர் மக்களில் மந்திரப் பிரமாணமும் தருமமும் கற்ற ஒருவனே, ஊர் மன்றில் தன் தந்தையின் கரைக்குரிய உறுப்பினனாக இருக்கலாம்; அதே தகுதியுள்ளவனே, விற்கப்பட்ட அல்லது விலைக்கு வாங்கப்பட்ட அல்லது பெண்ணுடைமையாகப் பெறப்பட்ட கரைக்குரிய ஆளாக மன்றில் இருக்கலாம்.
(2) இங்ஙனம் மூவகையில் அடையப் பெற்ற கரை, ஒருவனை முழுவுறுப்பாண்மைக் ( Full membership ) கன்றி, கால் அரை முக்கால் உறுப்பாண்மைக்கு உரியவனாக்காது.
(3) கரையை விலைக்கு வாங்குவோர், ஒரு வேத முழுவதையும் அதன் பரிச்சிட்டங்களோடு நன்றாக ஓதியிருப்பானையே, தம் கரைக்குரிய உறுப்பினனாகத் தேர வேண்டும்.
(4) முழு வுறுப்பாண்மையில்லாதார், ஊர்க்காரியங்களை நிறைவேற்ற எந்த வாரியத்திலும் இருக்க முடியாது.
(5) இத் தகுதி யெல்லாமுடையோர், ஊர்மன்ற நடவடிக்கை களில், ஒவ்வொரு முன்னீட்டையும்( Proposal ) கட்டுப்பாடாக எதிர்க்கவுந் தடுக்கவுங் கூடாது.
(6) இங்ஙனம் தடங்கல் செய்தோர், தாமும் தம் சார்பாளருமாக, தம்மாற் செய்யப்பட்ட ஒவ்வொரு தடங்கற்கும் ஐங்காசு தண்டமிறுத்து விதிகட்குங் கட்டுப்படுவாராக.