பக்கம் எண் :

92பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

அறிந்திருந்தனர். அதனால், மூவேந்தரும் இருவகை வணிகத்தையும் ஊக்குதற்குச் சாலைகளும் துறைமுகங்களும் அமைத்தும், அவற்றைப் பாதுகாத்தும் வந்தனர்.

   வணிகம் என்பது வணிஜ் என்றும், வாணிகம் என்பது வாணிஜ்ய என்றும் வடமொழியில் திரியும்.

   நாட்டிற்கு உள்ளிருந்து ஆட்சியைச் செவ்வையாய்ச் செய்தற்கு ஒரு மருதநிலத் தலைநகரும், நாட்டோரத்திற் கடற்கரையிலிருந்து நீர்வணிகத்தை ஊக்குதற்கு ஒரு நெய்தல் தலைநகருமாக, இரு தலைநகரை மூவேந்தரும் தொன்றுதொட்டுக் கொண்டிருந்தனர்.
 

வேந்தன் மருதத்தலைநகர் நெய்தல்தலைநகர்
பாண்டியன் மதுரை கொற்கை
சோழன உறையூர் புகார் (காவிரிப்பூம்பட்டினம்)
சேரன் கருவூர்

(கரூர்) வஞ்சி


   முதலிரு கழக நூல்களும் முற்றும் அழிந்து போனமையால், பாண்டியரின் இடைக்கழகக்கால மருதநிலத் தலைநகரும் தலைக் கழகக்கால நெய்தல்நிலத் தலைநகரும் அறியப்படவில்லை. சேரர் கொங்குநாட்டை இழந்த பின்னர், வஞ்சிக்கே கருவூர்ப் பெயரை இட்டுக்கொண்டனர்.

   கோநகர்களிலும் துறைநகர்களிலும் இருந்து நிலவணிகமும் நீர்வணிகமும் செய்து வந்த நகரத்தார் அல்லது நகர மாந்தர் என்னும் வகுப்பினரை, எண்பேராயங்களுள் ஓராயமாகக்கொண்டு, அவரை மன்னர் பின்னோர் என்று சிறப்பித்தும், அவருள் தலைமை யானவர்க்கு எட்டிப்பட்டம் வழங்கியும், மூவேந்தரும் ஊக்கி வந்தனர்.

   எட்டிப்பட்டச் சின்னமாக ஒரு பொற்பூ அளிக்கப் பெறும்.

"எட்டிப்பூப் பெற்று" (மணிமே. 22: 113)

   எட்டிப்பட்டம், அதைப் பெற்ற வணிகனின் மனைவிக்கும், அல்லது மகட்கும் மதிப்புரவுப் பட்டமாக (Title of Courtesy) வழங்கி வந்ததாகப் பெருங்கதை கூறும்.

"எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய
மயிலியன் மாதர்"
- (பெருங். இலாவா. 3: 144)

   எட்டிப் பட்டத்தார்க்கு, எட்டிப்புரவு என்னும் நிலமானி யமும் அளிக்கப்பட்டதாக மயிலைநாதர் உரை குறிக்கும் (நன். 158).

" கோடியும் தேடிக் கொடிமரமும் நட்டி"