சில முறைப்பெயர்களின் விளிவேற்றுமைகள் முதல் வேற்றுமைக்குப் பதிலாக வழங்கி வருகின்றன. அவை வழக்கு நோக்கி அமைக்கப்படும். ஆனால், அவற்றுக்குமேல் உயர்வு கருதி ரகரவொற்றுச் சேர்ப்பது வழுவாகும். உயர்வுப் பன்மைவிகுதி முதல் வேற்றுமை யோடுதான் சேரும். அம்மாள், அக்காள், என்பன விளிவேற்றுமையுடன் ளகரமெய் சேர்ந்தவை. தங்கா, தங்காள் என்பன வழு. உ-ம்: 1ஆம் வே. | 8ஆம் வே | பிழை | திருத்தம் | ஐயன் | ஐயா | | | அப்பன் | அப்பா | அப்பார் | அப்பனார் | அண்ணன் | அண்ணா | அண்ணார் | அண்ணனார் | மாமன் | மாமா | | | அண்ணன்காரன், அக்காக்காரி என்று முறைப்பெயர்களுடன் காரன், காரி யீறுகளைச் சேர்ப்பதும்வரப்பட்ட, போகப்பட்ட என்று செயப்படுபொருள் குன்றிய வினைகளைச் செயப்பாட்டு வினைகளாகக் கூறுவதும், என்னங்க, வந்தானுங்க என முன்னிலைக்குரிய உங்கள் (உம் + கள் ) விகுதியைப் படர்க்கைச் சொல்லொடு சேர்த்துக் கூறுவதும், சும்மா யிரு என்னும் பொருளில் பேசாமலிரு என்று சொல்லுவதும் வழுவாகும். நீன், மேக்கு, சீலை முதலிய சொற்கள் வழுவாய்க் கருதப்படினும் வழுவல்ல. சில சொற்றொடர்கள் உலக வழக்கில் மிகைபடக் கூறல் (redundancy) ஆக வழங்கி வருகின்றன. உ-ம்: பிழை | திருத்தம் | அரைஞாண் கயிறு, கொடி | அரைஞாண் | ஆண்பிள்ளைப் பிள்ளை | ஆண்பிள்ளை | ஆண்பிள்ளை ஆள் | ஆடவன், ஆண்பிள்ளை | காரான் பசு | காரா, காரான் | பெண்பிள்ளைஆள் | பெண், பெண்டு | பெண்பிள்ளைப் பிள்ளை | பெண்பிள்ளை | மாங்காய்ப்பழம் | மாம்பழம் | வெந்நீர்த் தண்ணீர் | வெந்நீர் | மரூஉச்சொற்கள் - Disguised and Corrupted words அலங்காரம் - ஆங்காரம், அதிகமான் - அதியமான், அருமருந்தன்ன - அருமந்த, அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் - அமுதம், அவிழ்து - அமிழ்து - அமுது, ஆள்வார் - ஆழ்வார், இயல் - ஏல், இராக்கதன் - இராக்கன் - அரக்கன், (இ) ராமம் - நாமம், காடுகிழாள் - காடுகாள், காமம் உறு - காமுறு, |