பக்கம் எண் :

112வடமொழி வரலாறு

காக்கை - காக்க

     காகா - காக்கா - காக்கை. காகா - காகம்.

     ஆரியம் தோன்றுமுன்பே காக்கை என்னும் சொல்
குமரிக் கண்டத்தில் தோன்றிவிட்டது.

காஞ்சி1 - காஞ்சீ

     காஞ்சி = ஆற்றுப் பூவரசு, அம் மரம் சிறந்த பழந்தொண்டை
     நாட்டுத் தலைநகர்.

     காஞ்சி - கஞ்சி - கச்சி.

     காஞ்சிபுரம் = கோபுரமுள்ள காஞ்சிநகர். புரம் என்பது பண்டைத்
தமிழகத்திற் கோபுரமுள்ள நகர்ப் பெயரீறு.

காஞ்சி2 - காஞ்சீ

     காஞ்சி = எழுகோவையுள்ள மாதர் அரைப்பட்டிகை.

"எண்கோவை மேகலை காஞ்சி யெழுகோவை
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு
விரிசிகை யென்றுணரற் பாற்று"

என்பது பழைய மேற்கோள் வெண்பா.

     ஐவகை அரைப்பட்டிப் பெயர்களுள் காஞ்சி, மேகலை, கலாபம்
என்னும் மூன்றும் வடநூலுட் புகுந்துள்ளன. அதனால் அவை
வடசொல்லென்று காட்டப்படுகின்றன. ஆயின், அங்குச் சிறப்புப்
பொருளை யிழந்து அரைப்பட்டிகை என்னும் பொதுப் பொருளே
தருகின்றன.

காண் - ஜ்ஞா (இ. வே.)

தமிழ் பழைய
ஆங்கிலம்
இலத்தீனம் கிரேக்கம்
வேத
ஆரியம்
         
கண் கான், கன்,
கென் கொன்,
க்னோ
க்னோ(g)
க்னோ(g)

ஜ்ஞா

     இவ்வொரு சொல்லே, தமிழ் எங்ஙனம் ஆரியத்திற்கு மூல மென்றும்,
வேத ஆரியம் எவ்வளவு திரிந்துள்ளதென்றும், காட்டப் போதியதாம்.

காண்டம் - காண்ட (வே.)

     கண்டு - கண்டம் = பெருந்துண்டு, பெருநிலப் பிரிவு.

     கண்டம் - காண்டம் = நூற்பெரும் பிரிவு.