பக்கம் எண் :

மொழியதிகாரம்117

காளம் - கால

     கல் - கஃறு = கறுமை, கருமைக் குறிப்பு.

"கஃறென்னுங் கல்லத ரத்தம்"
(தொல். எழுத்து. 40, உரை)

     கல் - கால் = கருமை.

"கால்தோய் மேனிக் கண்டகர்"
(கம்பரா. வானர. 21)

     கல் - கள் - களம். கால் - காள் - காளம் = கருமை. காள் - காழ் -      காழகம் = கருமை.

     கள் -காள் - காளம் = கருமை.

காளம்2 - காஹல

     எக்களித்தல் = கெந்தளித்தல், பெருமகிழ்ச்சி கொள்ளுதல்.

     எக்களி - எக்காளம் = கெந்தளிப்பு. கெந்தளிப்பாய் ஊதும்
கொம்பு அல்லது குழற்கருவி. எக்காளம் - காளம் - காளகம்.

காளகம் - காலக

     காளம் - காளகம் = கருமை.

"காளக வுடையினன்"
(சீவக. 320)

     காளகம் - காழகம் = கருமை.

"காழக மூட்டப் பட்ட"
(சீவக. 1230)

காளி-காலீ

     கள்-காள் - காளி = கரியவள், பேய்த்தலைவி, பாலைநிலத் தெய்வம்.

     கருப்பி, கருப்பாய், மாரி என்னும் உலக வழக்கையும் மாயோள்
என்னும் செய்யுள் வழக்கையும் நோக்குக.

     மால் - (மார்) - மாரி = கருமுகில், மழை, கரியவள் (காளி).

     மரணத்தை உண்டாக்குபவள் என்று பொருள் கூறி மாரி என்பதை
வடசொல்லாகக் காட்டுவது பொருந்தாது.

     மா = கருமை. மா-மாயோள் = கரியவள் (காளி).

     பண்டைத் தமிழகத்திற் போர் பெரும்பாலும் பாலைநிலத்தில்
நிகழ்ந்தமையால், காளி போர்த் தெய்வமும் வெற்றித் தெய்வமும்
(கொற்றவை) ஆனாள். பின்பு தாயாகக் கருதப் பெற்றதனால்
அம்மையெனப் பெயர் பெற்றாள்.