பக்கம் எண் :

166வடமொழி வரலாறு

     வடவர் சு + வர்ண என்று பகுத்து நன்னிற முள்ளது என்று
பொருட் காரணங் காட்டுவர்.

     இரட்டித்த னகரத்தை ர்ண என்று திரிப்பது வடவர் மரபு.

     எ-டு : கன்னம் - கர்ண = காது.

     சோடை - சோஷ

     சுடு-சூடு - சோடு - சோடி. சோடித்தல் = காய்தல், வற்றுதல்

     (சங். அக.).

     சோடு - சோடை = வறட்சி.

     வடவர் சுஷ் என்பதை மூலமாகக் காட்டுவர். அது சுள் என்பதன்
திரிபென்பது முன்னரே கூறப்பட்டது.

     சோம்பு - ஸ்வப் (இ.வே.)

     சும் = அமைதி, ஒன்றுஞ்செய்யாமை, சோம்பல்.

     சும்மாயிருத்தல் = அமைதியாயிருத்தல், வினைசெய்யா திருத்தல்.

     "சிந்தையை யடக்கியே சும்மா யிருக்கின்ற திறமரிது" (தாயு. தேசோ.)
     சும் - சும்பு. சூம்பு = சோம்பல். சூம்பு - சோம்பு.

     சோம்புதல் = வினைசெய்யாதிருத்தல், சுறுசுறுப்பின்மை, கால
     நீட்டித்தல், தூங்க விரும்புதல்.

     ஒ.நோ : தூங்குதல் - உறங்குதல், காலந்தாழ்த்து வினைசெய்தல்
     மந்தமாதல்.

     ஸ்வப் = தூங்கு, கனவுகாண்.

     L. somnus, Slav. supati, Lith. sapnus, AS. swef, Gk. hupnos =      sleep.

**********