பக்கம் எண் :

92வடமொழி வரலாறு

     3. வெற்றிச் சின்னம்.

     "பருதி.....விருதுமேற் கொண்டுலாம் வேனில்" (கம்பரா. தாடகை.5)

     வடவர் காட்டும் மூலம்:

     வி-ருத் (d)=அழு, கரை, ஏங்கு, புலம்பு, துயர்கொண்டாடு.

     விருத=புகழ்ச்சிச் செய்யுள், பாடாண்பாட்டு, ஏத்துரை.

     இரங்கற் செய்யுளாகிய கையறுநிலையில் ஒரு தலைவனை அல்லது
வள்ளலைப் புகழ்ந்து பாடுவது வழக்கமேனும், அழுகைக் கருத்தில்
வெற்றிக்கருத்துத் தோன்றுமா என்பதை அறிஞர் ஆய்ந்து காண்க.

வில்வம்-பில்வ (அ.வே.), வில்வ

     விள்-விளம் = வெள்ளையான தோடுடைய கனி.

     விள்-விளா-விளவு-விளவம். விளம்-விளர்-விளரி = விளர்.

     விளா-விளாத்தி. விளவம்-விலவம்-வில்வம் = கருவிளத்திற் கினமான
     கூவிளம்.

     வடமொழியில் மூலமில்லை.

விழி-வித் (d) - (இ.வே.)

     விள்ளுதல் = விரிதல், திறத்தல். விள்-விழி.

     விழித்தல் = 1. கண் திறத்தல்.

     "இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால்"
     (கலித். 144). 2. தூக்கந் தெளிதல்.

     "உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" (குறள். 339).

     3.காணுதல். 4.எச்சரிக்கையா யிருத்தல், முற்காப்பா யிருத்தல்.

     5. கவனித்து நோக்குதல்.

     "நாட்டார்கள் விழித்திருப்ப" (திருவாச. 5: 28).

     6. விளங்குதல், ஒளிர்தல்.

     "பொன்ஞா ணிருள்கெட விழிப்ப" (சீவக. 2283).

     7. அறிதல்.

     விழி = 1. அறிவு. 2. ஓதி (ஞானம்).

     "தேறார் விழியிலா மாந்தர்" (திருமந். 177).

     L. vide, E. vide, Skt. vid = to know.

     வித்யா, வித்வான், வைத்ய, வேத, வேதஸ் (dh) முதலிய பல சொற்கள்
வித் என்னும் மூலத்தினின்று பிறந்தவையே.

     ஆகவே ஆரியர்க்கு ஞானமும் வித்தையும் தமிழினின்றே தோன்றின
என அறிக.