பக்கம் எண் :

94வல்1 (வளைவுக் கருத்துவேர்)

வல்1 (வளைவுக் கருத்துவேர்)
     முழைத்தல் மொழி(Natural language), இழைத்தல் மொழி (Articulate Speech)என்னும் இருவகை மொழிகளுட் பின்னது பெரும்பாலும் உகரச் சுட்டடியாய்ப் பிறந்திருத்தலின், உகரமேறிச் சொன்முதலாகாத வகரமுதற் சொற்க ளெல்லாம். புல் என்னும் பகர முதலடியினின்றோ முல் என்னும் மகர முதலடியினின்றோதான் பிறந்துள்ளன.
     எ-டு:பகு - வகு, பால் - வால் (வெள்ளை), பிள் - விள்,
          பெள் - வெள் (விரும்பு) - வெய்.
     மல் - வல், மழி - வழி, மானம் - வானம், மிஞ்சு - விஞ்சு.
     முல் - மல் - வல், வல்லம் = வட்டமான ஓலைக்கூடை.
வல் - வல்லி = வளைந்த கொடி "வல்லி யனையாள்" (பு. வெ. பெண்பாற். 13. உரை)
     வல்லி - வ. வல்லீ.
வல் - வல. வலத்தல் = சூழ்தல். "நெடுங்கொடி வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்" (புறம். 52).
மல்-மலார் (C.G.) = வளைந்த இளம்போத்து (twig).
     தெ. மலாரமு.
     மலார்-வலார். "வலாஅர் வல்லிற் குலாவரக் கோலி" (புறம். 324). வலார்-வளார். "புளியம் வளாரால் மோதுவிப்பாய்" (தேவா. 1039 : 1).
     வளார் - வளாறு.
     வல்-வலி. வலித்தல் = 1. வளைத்தல் (சூடா.) 2. தண்டால் நீரை வளைத்துப் படகோட்டுதல். 3. முகத்தை வளைத்து வலிச்சங் காட்டுதல். 4. வில்வளைய இழுத்தல். "சார்ங்கம் வளைய வலிக்கும்" (திவ். நாய்ச். 5 : 8). 5. சுண்டியிழுத்தல். 6. இசிவுண்டாதல். 7. சுண்டி யிழுத்தாற்போல நோவுண்டாதல். வலி = நோவு.
     வல் - வலை = உயிரிகளைச் சூழ்ந்து அகப்படுத்தும் கயிற்றுக் கருவி. "புலிகொண்மார் நிறுத்த வலையுள்" (கலித். 65). 2. சூழ்ச்சி. "அகப்பட்டேன்......வாசுதேவன் வலையுளே" (திவ். திருவாய். 5: 3: 6).
     ம. தெ. வல, க. பலெ (b)
     வல்-வள்-வள்ளம் = 1. வட்ட உண்கலம், வட்டில். "வள்ளத் தவனேந்த... .மதுமகிழ்ந்தார்" (சீவக. 2700). 2. நாழிகை வட்டில் (சூடா.).