|
முள் - முட்டு. முட்டுக் குரும்பை = சிறு தென்னம் பிஞ்சு, அல்லது பனம் பிஞ்சு. |
முட்டு - மொட்டு = அரும்பு. "மொட்டருமலர்" (திருவாச.29 : 8) |
மொட்டு - மொட்டை = மணமாகாத இளைஞன் (W.) மொட்டைப் பையன் (உ.வ.)முளு - முழு - முகு - முகிழ். ஒ.நோ: தொழு - தொகு. |
முகிழ்த்தல் = (செ.கு.வி.) 1. அரும்புதல். "அருமணி முகிழ்த்தவேபோ விளங்கதிர் முலையும்" (சீவக. 551). 2. தோன்றுதல். "மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே" (ஐங்குறு. கடவுள்). கூம்பும் மலர்போற் குவிதல் அல்லது மூடுதல். "மகவுகண் முகிழ்ப்ப" (கல்லா.7). |
(செ.குன்றாவி.) 1. ஈனுதல். "அமரராதியரை முகிழ்த்து" (விநாயகபு. 8: 154). 2. தோற்றுவித்தல். "அற்புத முகிழ்த்தார்" (காஞ்சிப்பு. பன்னிரு. 163). |
க. முகுள் (g). |
முகிழ் = 1. அரும்பு. "குறுமுகிழ வாயினுங் கள்ளிமேற் கைந் நீட்டார்" (நாலடி. 262). 2. குமிழி. "பெயறுளி முகிழென" (கலித். 56) |
முகிழ் - முகிழம் = மலரும் பருவத்துப் பேரரும்பு. (சது.). |
ய. முகுல. |
முகிழ் - முகிழி, முகிழித்தல் = முகிழ்த்தல். |
முகிழி - முகிழிதம் = முகிழ்தம் = அரும்பல், அரும்பு. "பொன்னின் முகிழிதம் விளைத்து" (குற்றா. தல. நாட்டுச். 9). |
முகிழ் - முகிள். முகிழம் - முகிளம். முகிழிதம் - முகிளிதம். |
முகிள் - முகுள் - முகுளம் = 1. அரும்பு. "பங்கய குமுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த" (திவாலவா. 4 : 14). 2. ஒரு கையின் ஐந்து விரலும் நிமிர்ந்து நுளி பொருந்திக் கூம்பி நிற்கும் இணையா விணைக்கை வகை. (சிலப். 3 : 18), உரை.) |
வ. முகுல. |
முகுளம் - முகுடம் = மணிமுடி. "முகுடமும் பெருஞ் சேனையும்" (பாரத. குரு. 14). 2. முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று. (திவா.). |
முகுடம் - வ. முக்குட்ட. |
முகுடம் - மகுடம் = 1. மணிமுடி. "அரக்கன்றம் மகுடம்" (கம்பரா. முதற்போ. 246). 2. தேர்க் குப்பம். 3. ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை. |
மகுடம் - வ. மக்குட்ட. |
பேரா. பரோ தம் 'சமற்கிருத மொழி' என்னும் நூலின் இறுதியில், முகுடம் (மகுடம்) என்பது திரவிடச் சொல்லென்று குறித்திருத்தல் காண்க. |