பக்கம் எண் :

8வேர்ச்சொற் கட்டுரைகள்

     குறிஞ்சி நிலத் தேவனை இளைஞனென்று கருதியே, குறிஞ்சி நில மக்கள் முருகன் என்றனர்.
     ஒ.நோ: குமரன் = இளைஞன், முருகன். ம. முருகன். க. முருக (ப.).
     முரு - முறு - முற் = 1. தளிர். "முறிமேனி" (குறள்.1113). 2. கொழுந்துல். "இலையே முறியே தளிரே தோடே" (தொல். மர. 88). 3. இலை (யாழ். அக.).
     முறிதல் = துளிர்த்தல். "முறிந்த கோல முகிழாமுலையார்" (சீவக. 2358).
     முறி - மறி = 1. குதிரை மான் முதலிய விலங்கின் இளமை.
 
"பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
 கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்என்
 றொன்பதும் குழவியோ டிளமைப் பெயரே"
(தொல். மர. 1)
 
 
"யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்
 ஓடும புல்வாய் உளப்பட மறியே"
(மேற்படி. 12)
 
     2. அழுங்கின் குட்டி. (பிங்.). 3. மான்குட்டி. "மறிகொள்கையன்" (தேவா. 980 : 10). 4. செம்மறியாடு. "மறியுடையாயர் மாதர்" (கம்பரா. ஆற்று. 15). 5. மேழ ஓரை. (சூடா.). 6. ஆடு, குதிரை, கழுதை முதலியவற்றின் இளம்பெட்டை, பெண் விலங்கு.
     ஒ.நோ: நாகு = இளமை, சில விலங்கின் பெட்டை. (மைடு) க., து. மரி.
     மண் - மாண் - மாணி = 1. இளமை. 2. அழகு. "மாணிக்குறளுருவாய மாயன்" (திவ். பெரியாழ். 5 : 2 : 5). அரும் 3. பள்ளிச் சிறுவன் "கருமாணியா யிரந்த கள்வனே" (திங். இயற். 2 : 61). 3. குறள் வடிவம்.
     மண் - மாண் = 1. பள்ளிச் சிறுவன். "மாணாகி வையமளந்ததுவும்" (திவ். பெரியதி. 8 : 10 : 8). 2. குறள் வடிவம் குறளன். "குறுமா ணொருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164 : 5).
     மாண்மகன் = பள்ளிச்சிறுவன். "பண்டு மாண் மகன்றன் செயல் பார்த்தவோ" (தக்கயாகப். 672).
     மாண் - மாணவன் = 1. பள்ளிச் சிறுவன். "மஞ்சனைக் குறுகியொரு மாணவப் படிவமொரு" (உத்தரரா. அனுமப். 6).
     மாணவன் - வ. மாணவ.
     மாணவன் - மாணவகன் = 1. மாணி, மண்மாகா இளைஞன் "பொச்ச மொழுகு மாணவகன்" (பெரியபு.சண்டேச்சு. 40). 2. பள்ளிச் சிறுவன். ஓலைக் கணக்கன், மழபுலவன். "ஆசான் முன்னே துயில மாணவகரை" (திருமந். 2163). 3. எட்டுமுதல் பத்தாண்டிற்குட்பட்ட சிறுவன். (யாழ். அக.).
     மாணவன் - வ. மாணவக.
     மாணவகன் - மாணாக்கன் = கற்போன், பள்ளிச் சிறுவன் "இவனோரிள மாணாக்கன்" (குறுந். 33).