பக்கம் எண் :

170ஊரும் பேரும்

பழையனூர் ஆலங்காடு என்று தேவாரத்திற் குறிக்க பெற்றுள்ளது.20 அது

தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் அமைந்த ஊர் என்று சாசனம்

கூறும். மூவர் பாமாலையும் பெற்ற அம் மூதூர் காரைக்கால் அம்மையார் சிவப்பேறு பெற்ற பெருமையும் உடையதாகும்.
 

பனங்காடு


    பழங்காலத்தில் தொண்டை மண்டலத்துக் கலியூர்க்கோட்டத்தைச்
சேர்ந்த கழுமல நாட்டில் பனங்காடு என்னும் பதி அமைந்திருந்த தென்று
சாசனம் கூறும்.21 பனங்காட்டின் இடையே பரமன் கோயில் காண்டமையால்
பனங்காட்டூர் என்பது அவ்வூரின் பெயராயிற்று.22 அப்பதியில் அமர்ந்த
பெருமானை,

           
“பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
            பனங்காட் டூரானே
            மாட்டூர் அறவா மறவா துன்னைப்
            படப் பணியாயே”

என்று சுந்தரர் பாடியுள்ளார். இக் காலத்தில் வட ஆர்க்காட்டுச் செய்யார்
வட்டத்தில் உள்ளது திருப்பனங்காடு.
 

திருவெண்காடு

    மற்றொரு பனங்காட்டூரும் தேவாரப் பாடல் பெற்றதாகும்.
விழுப்புரத்திற்கு வடக்கே ஐந்து மைல் அளவிலுள்ள பனையபுரம் என்னும்
ஊரும் பனங்காட்டூர் என்பர். இப்பகுதியைப் பாடியருளிய
திருஞானசம்பந்தர், “புறவார் பனங்காட்டூர்” என்று பாசுரந்தொறும்
குறித்தலால், அதுவே அதன் முழுப் பெயர் என்று கொள்ளலாகும்.23