பக்கம் எண் :

மாதர் - பெண் விடுதலை (2)

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும்முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால்:-

(1) பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது.

(2) அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனைவிவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.

(3) விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை"விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டுஅவளை அவமானப்படுத்தக் கூடாது.

(4) பிதுரார்ஜிதத்தில் பெண்குழந்தைகளுக்கு ஸமபாகம்செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.

(5) விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம்,கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும்ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்கஇடங்கொடுக்கவேண்டும்.

(6) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன்பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும்பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும்.

(7) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக்கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.

(8) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்விதஉத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.

(9) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந்திரம்இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில்தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும்"ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர்மிஸஸ் அன்னிபெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதைமறந்து போகக் கூடாது.

இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள்காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரணவிடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக்காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீகரிஷிபத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வரஇடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம்மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால்ஆண் உயராது.