பக்கம் எண் :

கலைகள் - டிண்டிம சாஸ்திரியின் கதை

நம்பூரிப் பிராமணரைப் பற்றி நான் பிறந்தது முதல் இன்றுவரை நீர் ஒருவர்தான் ஸ்தோத்திரம் பண்ணக்கண்டேன். இதுவரை எங்கே போனாலும் நம்பூரியைத்திட்டுவார்களே யொழிய, நம்பூரி நல்லவன் என்று யாரும் சொல்வது கிடையாது" என்று நான் சொன்னேன்.

அப்போது டிண்டிம சாஸ்திரி சொல்லுகிறார்: - ஐயோ, ஸ்வாமி! ஐயோ, ஸ்வாமி! ஐயோ, ஸ்வாமி! தங்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் தாங்கள் இந்த ஸங்கதி மாத்திரம் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்! மலையாளத்தில் தெய்வம் நேரேபேசுகிறது, ஸ்வாமி. அங்கே நல்ல பாம்புகள் மனுஷ்யருடைய காலைச்சுற்றிவரும், கடிக்காது. பதிவிரதைகள் அந்தப் பாம்புகளை வசப்படுத்திப் போட்டார்களாம்.

"நம்பூரி என்றால், ''நம்பிஸ்ரீ'' என்ற பட்டத்தின் திரிதல் விகாரம். பாலக்காட்டில், எனக்கு ஒரு நம்பூரிப் பிராமணர் ஸ்நேகிதராக இருந்தார். அவருக்கு அவ்வூர் வக்கீல் ஒருவர் சொல்லிய சில சரித்திர சம்பவங்களை அவர் எனக்குச் சொன்னார்.

"152-ம் வருஷத்தில் கொச்சி ராஜா ஐம்பதினாயிரம் நாயர் படையும் சில போர்த்துகீசிய பீரங்கிப் பட்டாளமும் சேர்த்துக்கொண்டு கோழிக்கூட்டு (கள்ளிக்கோட்டைத்) தம்பிரான் "மேலே படையெடுத்து வந்தார். அப்போது தம்பிரானைச் சேர்ந்த பிராமணர்கள் கூட்டம் கூடி கொச்சி ராஜா அன்னியருடன் சேர்ந்துகொண்டு பிராமண சத்துருவாக மூண்டதுபற்றி அவனைச் சாபமிட்டார்கள். பிராமண சாபத்துக்கிடமான ராஜாவுக்கு ஐயம் கிடையாதென்று தீர்மானித்துக் கொச்சிராஜனுடன் வந்த ஐம்பதினாயிரம் போர்த்துகீசியர் முகத்தை நோக்கப்போர்த்துகீசியர் கடலை நோக்கத் தம்பிரான் தலை பிழைத்தது.

"திப்பு சுல்தான் காலத்தில்தான் முகம்மதிய ஸேனாதிபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரிந்து நிற்கும்படி செய்வித்து பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தை சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப்போய் விட்டதாக புல்லர்டன் என்ற இங்கிலீஷ் சேனாதிபதி எழுதிவைத்திருக்கிறான். இச்சங்கதி களெல்லாம் ''லோகன்'' எழுதின ''மலபார் மானுயல்'' புஸ்தகத்தில் போட்டிருக்கிறதாம். அந்தக் காலத்து போர்த்துகிசிய வைஸ்ராய், ''ஆல்பான்ஸோ ஆல்புகர்க்'' என்பவன் கொச்சி ராஜாவிடம் சொன்னானாம்: ''இனிமேல் இந்த ராஜ்யத்தில் பிராமணவாக்கு செல்லாது. இனிமேல் அன்னியனுடைய கோலுக்கு வணங்க வேண்டும்'' என்று சொன்னானாம்.