பக்கம் எண் :

காமதேனு - சில முயற்சிகள்

இக்காலத்திலே பலர் நமது பாஷைகளை ஒளிமிகச் செய்து பூமண்டலத்தார் வியக்கும்படி செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். பலர் நமது பூர்வ சாஸ்திரங்களின் உண்மையை உலக முழுவதும் கேட்டு உஜ்ஜீவிக்கும்படி செய்யவேண்டுமென்று பாடுபடுகிறார்கள். பலர் நமது நாட்டுச் செல்வத்தை வெளியேற வொட்டாமலதடுக்க வழி தேடுகிறார்கள். பலர் ஹிந்து தேசத்துக்குத் தன்னாட்சி வேண்டுமென்று தொழில் செய்து வருகிறார்கள். பலர் ஆரிய வேதத்தைச் சரண்புகுந்து பூமண்டலம் வாழும்படி செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். இவ்வனைவருக்கும் வெற்றி உண்டு; நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு.