பக்கம் எண் :

காமதேனு - சிலுவை

யூதர்களை ரோம தேசத்தார் வென்று யூதநாட்டில் பிலாத்து ரோமன்ராஜாதிகாரியாய்விட்டான். இயேசு கிருஸ்து தெய்வத்தை நம்பி விடுதலையை முழக்கினார். யூதகுருக்களே அவருக்கு விரோதமாய் அன்னியனான அதிகாரியிடம் கோள் மூட்டிவிட்டார்கள். உள்ளூர் யோக்கியர்கள், வெளிநாட்டு யோக்கியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கிருஸ்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள்.'கிருஸ்து மதத்தையே கொன்றுவிட்டோம்' என்று அந்த மூடர்கள் நிச்சயித்தார்கள். இன்று கிருஸ்து மதம் உலக முழுவதையும் சூழ்ந்து நிற்கிறது. வருந்தினால் வாராதது ஒன்றுமில்லை.