பக்கம் எண் :

சமூகம் - அனந்த சக்தி

தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும்பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம். இந்தநோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவே நாம் உயிர்தரிக்கின்றோம். ''மாதா'' இந்த நாட்டு ஜனங்களுக்குச்சக்தியதிகரிக்கும்படி செய்க; அக் காரியத்தைநிறைவேற்றுதற்குரிய சக்தியை எனக்கருள் புரிக'' என்றுநம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரிய வேண்டும்.ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை, மற்போர்முதலியவற்றிலே பழகுதல், பாடுதல், தர்க்கம், வாதம்,தவம், பிரமச்சரியம், சுத்தம் முதலியவற்றால் ஓர் ஜாதிக்குசக்தி அதிகப்படுகிறது. மனம், வாக்கு, செயல் மூன்றும்சுத்தமாக இருக்கவேண்டும். உள்ளும் புறமும் மாசில்லாதுசெய்யப் பழகவேண்டும். பயம், ஸந்தேஹம், சலனம்மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தியேற்படும்.

புராதன ஸம்பிரதாய மென்பதால் மட்டுமேஒன்று பொய்யாய்விடமாட்டாது; புதியதென்பதால் மாத்திரமே ஒன்றை மெய்யாகக் கொண்டு விடுதலும் பிழை.ஆராய்ந்து, அனுபவத்தால் பார்க்குமிடத்தேதான், ஒருவிஷயத்தின் மெய்மையும் பொய்ம்மையும் விளங்கும்.நமது முன்னோர்கள் "யோகம்" என்றதோர் மார்க்கம்ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இஃது ஹடயோகம், ராஜயோகம்,பக்தியோகம், ஞானயோகம் என நான்கு வகைப்படும்.இவற்றில் ஹடயோகந்தான் மிகக் குறைந்த பயன் தரக்கூடியது; மற்ற மூன்றிலும் அனந்த சக்திகள் பெறலாம்.விஷயம் தெரியு முன்பாகவே, ''இதில் பயனென்ன விளையப் போகிறது'' என்று சந்தேகப்படுதல் தெளிந்தோர்செய்யும் காரியமன்று; அவற்றை ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும். அங்ஙனம் சாதனை செய்தவர்களுக்கு பலவிதஅபூர்வ சக்திகளுண்டாயிருப்பதைக் கண்ணாரக் காண்கிறோம்.நமக்கும் ஏன் இந்த சக்திகள் ஏற்படக் கூடாது?

இந்த மூடத் தமோ குணத்தால் என்ன சுகங்கள்கண்டு விட்டோம்?  சோம்பராலும் அற்ப விஷயங்களிலேஆசை கொண்டு மனதைக் கடலில் அகப்பட்ட துரும்புபோலச் சலிக்க விடுவதாலும் என்ன பேறுகள் பெற்றுவிட்டோம்?

துணிவு, உள்ளத் தூய்மை, ஏதாவதொரு மகத்தானலட்சியத்திலே அறிவை ஆணி கொண்டடித்ததுபோலப்பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நஷ்டங்களிலே சிந்தனைஇல்லாமை - இவைதான் யோகத்தின் இரகசியம்.