''நமது மதக் கொள்கைகளில் பயனில்லாதது, ஜடமாவது, புறவடிவமாவது, தெளிவில்லாதது, நிச்சயமில்லாதது- இவற்றை நாம் பயமில்லாமல் தள்ளி விடவேண்டும். அதன்ஸாரத்தை மாத்திரம் கொள்ளவேண்டும். எத்தனைக்கெத்தனைஇந்த ஸாரத்தை நாம் சுத்தப்படுத்துகிறோமோ, அத்தனைக்கத்தனை ஜகத்தின் உண்மை விதி நமக்குத் தென்படும்.'' எது தெய்வம்? 'ஹெர்மெஸ்' என்ற புராதன மிசிர(ஈஜிப்டு)தேசத்துஞானிசொல்லுகிறார்: ''உடலில்லாதது, தோற்றமில்லாதது, வடிவமற்றது,"ஜடமில்லாதது, நமது புலன்களுக்கு எட்டாதது-இது தெய்வம்.' ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- 'ஈசன் ஒளி; எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்தது போல் மறைந்து நிற்கும் ஒளியே தெய்வம்.' பட்டினத்துப்பிள்ளை:- 'எட்டுத் திசையும் பதினாறுகோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கும்ஜோதி.' தாயுமானவர்:- 'சுத்த அறிவே சிவம்.' ரிக்வேதம்:- உண்மைப் பொருள் ஒன்று. அதனைப்புலவோர் பலவாறு சொல்லுகிறார்கள்.' நம்மாழ்வார்:- 'திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம்இவைமிசைப் படர் பொருள் முழுவதும் ஆய், அவையவைதோறும் உடல்மிசை உயிரெனக் கரந்துளன்.' ஹெர்மெஸ்:- 'தெய்வம் எது? ஜகத்தின் உயிர்.' எனவே, எல்லா மதங்களும் உண்மைதான்: ஒருமதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதிமனிதர் பிரிந்துவிடக்கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரேதெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். லௌகிக விஷயங்களைப்போலவே மத விஷயங்களிலும் ஒப்பு, உடன் பிறப்பு, விடுதலைமூன்றும் பாராட்ட வேண்டும். |