இடைக் காலத்தே நமக்குச் சேர்ந்த கேட்டிற்குஸங்கீதத்தையும் கவிதையையும் திருஷ்டாந்தங் காட்டினோம்.ஆனால், இந்தக் கேடு அவை இரண்டையும் மாத்திரமேதொட்டு நிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம்,நமது ஜனக்கட்சி, ஜன நீதி, நமது சாஸ்திரம், தலை, கால் -எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய்ந்து விட்டது. நோய்முற்றிப்போயிருந்தது. பராசக்தி நல்ல வேளையில் நமக்குள்உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினாள். அவளுக்கும்நம்மீது கிருபை வந்து விட்டது. எனவே, பிழைத்தோம்ஆனாலும், இம்முறை பிழைத்தது புனர்ஜன்மம். இந்தப் புனர்ஜன்மத்தின் குறிகளை எல்லாவற்றிலும் காண்கிறோம். பாரதஜாதி புதிதாய் விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மஹா"கவிகளில் நமது ரவீந்த்ரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக்கொள்ளுகிறது. இதுவரை ஐரோப்பியப் பண்டிதர்கள் இயற்கைநூல் (ப்ரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடமை என்றுகருதி வந்தார்கள். இப்போது நமது ஜகதீச சந்திர வஸு அந்தவழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல் நாட்டுவித்வான்களில் ஒப்புக்கொள்ளாதார் யாருமில்லை. தமிழ்நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலேதோன்றும். உலகம் பார்த்து வியப்படையும். செத்துப் பிழைத்தோம். ஆனால் உறுதியாக நல்லவயிரம் போலே பிழைத்து விட்டோம். புதிய ஜன்மம் நமக்குமிகவும் அழகான ஜன்மமாகும்படி தேவர்கள் அருள்புரிந்திருக்கிறார்கள் அதன் பொருட்டு அவர்களை இடைவிடாமல்வாழ்த்துகின்றோம். |