3. கோடைக்காலம். “என்றூழ் வாடு வறல்போல” (புறம். 75). எருப்பு (தெ.) = சிவப்பு. எரங்காடு = செந்நிலம். இல் - இலந்தை = செம்பழமுள்ள முட்செடி. இலந்தை இரந்தை (இலந்தை) “இரந்தையின் கனி” (சேதுபு. காசிப. 46) இல் - இர் - இரத்தி = இலந்தை. “இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து” (புறம். 34 62) இர் - இராகி = சிவந்த கேழ்வரகு, M., T., K., Tu. ragi. உல் - அல் - அலத்தம் = 1. செம்பருத்தி. 2. செம்பஞ்சுக் குழம்பு. அலத்தம் - அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. அலத்தம் - அலத்தை = செம்பஞ்சு. அல் - அலந்தல் = செங்கத்ரி. அலந்தல் - அலந்தலி = செங்கத்தரி அலத்தம், அலத்தகம் என்னும் தென்சொற்களை ஆரியப் படுத்துவான் வேண்டி முறையே, அ - லக்த, அ - லக்தக என உடலை இரு துண்டாய் வெட்டுவதுபோல், இரு கூறாய்ச் சிதைத்துப் பொருள் கூறுவர் வடமொழியாளர். அல் - அர் - அரக்கு = 1. சிவப்பு. Skt. rakta. 2. சாதிலிங்கம். 3. செம்மெழுகு. Skt. raksha. அரக்காம்பல் = செவ்வாம்பல் (பிங்.). அரக்குக் காந்தம் = செங்காந்தக் கல். அரக்குச் சாயம் = செஞ்சாயம். அரக்கு நீர் = 1. அரத்தம். “புண்ணிடை யரக்குநீர் பொழிய” (சூத. முத்தி. 7, 25). 2. சாதிலிங்கம் கலந்த நீர். “அரக்குநீர்ச் சிவிறி யேந்தி” (சீவக. 2657). 3. சிவந்த ஆலத்தி நீர். “அரக்குநீர் சுழற்றி” (விநாயகபு. 80 277). அரக்குமஞ்சள் = செம்மஞ்சள். அரக்கு (செம்மெழுகு) - M. arakku. K., Tu. aragu. Hindi, lakh; Skt, laksha, raksha; E. lac. |