ம. கடு. கடு - கடி = கூர்மை. “கடியென்கிளவி காப்பே கூர்மை’’ (நன். 457). கள் - கண்டு = முள்ளுள்ள கண்டங்கத்தரி. கண்டு - கண்டி = 1. முள்ளுள்ள உருத்திராக்கம், 2. உருத்திராக்க மாலை. “கண்டியிற் பட்ட கழுத்துடையீர்’’ (தேவா. 586: 6) கண்டி - கண்டிகை = உருத்திராக்கமாலை (பிங்.) கண்டிகை - கண்டிகா (வ.). கண்டு - கண்டம் = 1. கள்ளி (மலை.). 2. எழுத்தாணி (பிங்.). 3. கண்டங்கத்தரி, உருத்திராக்கமணி. கண்டங்கத்தரி - கண்டகாரி (வ.). கண்டம் (முள்) - காண்டா (இந்தி). கண்டு - கண்டல் = 1. முள்ளி (சூடா.). 2. நீர்முள்ளி (மலை.). 3. முள்ளுள்ள தாழை. “கண்டல் திரையலைக்குங் கானல்’’ (நாலடி. 194). கண்டல் - கண்டலம் = 1. முள்ளி. 2. நீர்முள்ளி (மூ. அ.). கண்டு - கண்டகம் = 1. முள். “இளங்கண்டகம் விடநாகத்தின் நாவொக்கும்’’ (இறை. 41 172). 2. நீர்முள்ளி. “கண்டகங்காள் முண்டகங்காள்’’ (தேவா. 268 2). 3. உடைவாள். (திவா.). 4. வாள் (சூடா.). கண்டக சங்கம் = முட்சங்கு. கண்டகம்- கண்டக (வ.). கண்டகம் - கண்டகி = 1. தாழை. “வெம்மினது கண்டவியன் கண்டகி யெனவும்’’ (கந்தபு. தேவர்புல. 20). 2. இலந்தை. (இலக். அக.). 3. ஒருவகை மூங்கில் (இலக். அக.) 4. முதுகெலும்பு. குள் - கிள், கிள்ளுதல் = முள்ளுதல். கிள் - கிள்ளி - கிளி = கூரிய அலகினாற் கொத்தும் அல்லது கடிக்கும் பறவை வகை. கிள் - கிள்ளை = கிளி. கிள் - ம. கிள்ளு, தெ. கில்லு (g). கிளி - ம. கிளி, தெ. சிலுக்க. குள் - கெள் - கெளிறு - கெடிறு - கெளிற்றி - கொளுத்தி. குள் - கொள் - கொய். கொய்தல்= உகிராற் கிள்ளியெடுத்தல். ள் - ய். ஒ.நோ : தொள் - தொய், பொள் - பொய். குள் - குட்டு. ஒ.நோ : வள் - வட்டு. குட்டுதல் - கைமுட்டியால் தலையிற் குத்துதல். ம., தெ., க., து. குட்டு. குட்டு - குத்து. ஒ.நோ : முட்டு - முத்து. |