குருத்து - குருந்தம் = மாணிக்க வகை (W.). குருந்தம் - குருவிந்தம் = 1. தாழ்ந்த மாணிக்க வகை. (சிலப். 14186, உரை). 2. குன்றிமணி. 3. சாதிலிங்கம். குருவிந்தக்கல் = காவிக்கல். “இரத்தின மறியாதா னொருவன் குருவிந்தக்கல்லோடொக்கும் இதுவென்றால்’’ (ஈடு. 3:1:2). குருவிந்தம் - வ. குருவிந்த. குல் - குது. ஒ.நோ : மெல் - மெது - மெத்து, பல் - பது - பத்து - பஃது. குது - குதம் = வெங்காயம் (மலை.). குதம் - குதம்பு. குதம்புதல் = 1. கொதித்தல். 2. சினத்தல். குதம் - கதம் = 1. சினம். “கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்’’ (புறம். 33). 2. பஞ்சம். கதம் பிறந்தது (உ. வ.) - W. கதகதப்பு = 1. வெம்மை. “கதகதென் றெரியுதே காமாக்கினி’’ (இராமநா. ஆரணி. 8). 2. இளவெம்மை. மழைக்காலத்தில் கூரைவீடு கதகதப்பாயிருக்கும் (உ. வ.). கதம் - கதவு. கதவுதல் = சினத்தல். “கதவிக் கதஞ்சிறந்த கஞ்சன்’’ (திவ். இயற். 2:89). கதவு = சினம். “அவன் யானை மருப்பினுங் கதவவால்’’ (கலித். 57:19). கத - கதழ் - கதழ்வு. கதழ்தல் = 1. சினத்தல் (திவா.). 2. விரைதல். “கதழெரி சூழ்ந்தாங்கு’’ (கலித். 25 4). 3. மிகுதல். “கதழொளி’’ (சீவக. 1749). கதழ்வு = 1. கடுமை. 2. விரைவு (திவா.). 3. மிகுதி (திவா.). “கதழ்வும் துனைவும் விரைவின் பொருள’’ (தொல். உரி. 17). குல் - குன் - கன் - கனல் = நெருப்பு. “உழிதரு காலுங் கனலும்’’ (திருவாச. 5 8). கனலுதல் = 1. எரிதல். “வேமிருந்தை யெனக்கனலும்’’ (கம்பரா. சூர்ப்ப. 118). 2. சுடுதல். “வயிற்றகங் கனலுஞ் சூலை’’ (பெரியபு. திருநா. 62). 3. கொதித்தல். “தீப்போற் கனலுமே’’ (நாலடி. 291). 4. சிவத்தல். “கண்கனன்று... நோக்குதலும்’’ (பு. வெ. 6 23). 5. சினத்தல். “மாமுனி கனல மேனாள்’’ (கம்பரா. நீர்விளை. 2). கனல்வு = சினம். “இங்குநின் வர வென்னவெனக் கனல் வெய்த’’ (கம்பரா. சூளா. 78). |