பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

7

புல்1 பொருந்தற் கருத்துவேர்

புல்லுதல் = 1. பொருந்துதல். “அல்லா வாயினும் புல்லுவ வுளவே” (தொல். பொருளியல், 27). 2. புணர்தல். “புலந்தாரைப் புல்லா விடல்” (குறள். 1303). 3. தழுவுதல். “என்னாகம்.... புல்லி” (பு.வெ. 9 49). 4. வரவேற்றல். “புல்லா வகம்புகுமின்” (நாலடி. 303). 5. ஒத்தல். “புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல” (தொல். பொருள். 289, உரை). 6. ஒட்டுதல் (W.). 7. நட்புச் செய்தல். “ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும்” (தொல். புறத். 21, உரை).

புல் = புணர்ச்சி (பிங்.).

புல் = புலி (திவா.).

புல் - புல்லி - புலி = முன்னங் கால்களால் தழுவிப் பற்றும் வேங்கை அல்லது சிறுத்தை.

ம., க., தெ., புலி, து பில்லி.

புல் - புல்கு. புல்குதல் = 1. அணைதல். அணைத்தல். “அன்னந் தன்னிளம் பெடையொடும் புல்கி” (தேவா. 584 2. புணர்தல். (சது.). 3. நண்பராய் மருவுதல் (யாழ்ப்.).

புல் - புலம் = 1. ஐம்பொறிகள் பொருள்களொடு பொருந்தி அறியும் அறிவு. “நுண்மா னுழைபுலம்” (குறள். 407). 2. பொறியுணர்வு. “அடல்வேண்டு மைந்தன் புலத்தை” (குறள். 27 6). 4. இலக்கணம். “புலந்தொகுத் தோனே” (தொல். பாயிரம்). 5. நூல். 6. மறைநூல். “புலம்புரி யந்தணர்” (பரிபா. 6 45). 7. கூர்மதி (W.). 8. துப்பு (C.G.). 9. பொருந்தியிருக்கும் நிலம். “புலங்கெட விறுக்கும் வரம்பி றானை” (புறம். 16). 10. நிலம். 11. விளைநிலம். “விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்” (குறள். 85).

புலம் - புலன் = 1. பொறியறிவு. “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்” (குறள். 1101). 2. பொறி, “புலனொடு்