சில ஒருபொருட் பலசொற்கள், வேர்ப்பொருள் காரணமின்றி ஆட்சி காரணமாகவே வெவ்வேறுபொருள் குறிப்பனவாயுள்ளன. தொல்காப்பியனார், “ அன்ன ஆங்க மான இறப்ப என்ன உறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்’’ (உவமவியல், 12) “ எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப்ப வெல்ல வீழ என்றாங் கெட்டே பயனிலை யுவமம்’’ (உவமவியல், 14) “ கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்பஎன் றப்பால் எட்டே மெய்ப்பால் உவமம்’’ (உவமவியல், 15) “ போல மறுப்ப ஒப்பக் காய்த்த நரவியப்ப நளிய நந்தஎன் றொத்துவரு கிளவி உருவின் உவமம்’’ (உவமவியல், 16) என கொடுத்தது ஆட்சிபற்றியே. இனி அவர், “ செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூ விடத்தும் உரிய என்ப’’ (கிளவியாக்கம், 28) “ அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த’’ (கிளவியாக்கம், 29) “ ஏனை யிரண்டும் ஏனை யிடத்த’’ (கிளவியாக்கம், 30) “ யாதுஎவன் என்னும் ஆயிரு கிளவியும் அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்’’ (கிளவியாக்கம், 31) “ அவற்றுள், யாதுஎன வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாகலும் உரித்தே’’ (கிளவியாக்கம், 32) |