தேவும் தலமும்351

இராசராச விண்ணகரம்
 

    தென்னார்க்காட்டு விழுப்புர வட்டத்தில் உள்ள எண்ணாயிரம் என்னும்
ஊரில் இராசராச விண்ணகரம் ஒன்று உள்ளது. அங்குத் திருவாய் மொழி
ஓதுதற்காக விட்ட நிவந்தம் சாசனத்தால் விளங்குகின்றது.12 தாராபுரம்
என்னும் இராசராச புரத்தில் குந்தவைப் பிராட்டியார் கட்டிய பெருமாள்
கோயில் குந்தவை விண்ணகரம் என்று பெயர் பெற்றது.13

இராசேந்திர சோழ விண்ணகரம்

    உத்தர மேரூரில் இராசேந்திர சோழ விண்ணகரம் விளங்கிற்று.14
இராசேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்னும் மறுபெயர் பெற்ற
உத்தரமேரூரில் கொங்கரையர் ஒருவர் அவ் விண்ணகரத்தைக் கட்டுவித்தார்
என்பது கல்வெட்டால் விளங்குகின்றது.15

     நெல்லை நாட்டு அம்பா சமுத்திர வட்டத்தில் மன்னார்கோயில் என்ற
ஊர் உள்ளது. அழகிய மன்னார் என்னும் திருநாமமுடைய பெருமாள்
அங்குக் கோயில் கொண்டிருத்தலால் மன்னார்கோயில் என்று அது பெயர்
பெற்ற தென்பர். பிற்காலத்தில் இராஜேந்திர சோழ விண்ணகரம் என்னும்
திருக்கோயிலும் அவ்வூரில் எழுந்தது. அக்கோயிலைக் கட்டியவன்

இராஜசிம்மன் என்ற சேர மன்னன்.16 அவன் இராஜேந்திரனுக்கு அடங்கி
ஆட்சி புரிந்தமையால் சோழ மன்னன் பெயரை அவ்விண்ணகரத்துக்கு

அளித்தான் போலும்!

 

       தஞ்சை நாட்டு உடையார் கோயில் என்ற ஊரில் குலோத்துங்க
சோழ விண்ணகரம் உள்ளதென்று சாசனம்