பல கதம்பம்

65

தான்; கப்பலில் ஏறிவந்தான்; கோட்டையையும் காடு மலைகளையும் கைப்பற்றினான்; ராச்சியத்தைப் பிடித்துக் கொடியேற்றினான்; சென்னைக்குள்ளே வந்தான்; வேறு ஊர்களுக்கும் போனான்; நீலகிரியில் பங்களாக் கட்டினான்; வேட்டையாடினான்; கார், ரெயில், சைக்கிள், டிராம், ஆகாசக் கப்பல், எலக்ட்ரிக் விளக்கு எல்லாவற்றையும் கொண்டுவந்தான்; தார் ரோடுப் போட்டான்; ஆஸ்பத்திரி கட்டினான்; எழுத்தறிவு புகட்டினான்; கிராப்பு, காபி, சட்டை ஆகிய பழக்கங்களை உண்டாக்கினான்; கண் வைத்தியம் பண்ணினான்.

    வெள்ளெழுத்து மாறிருச்சே
        இந்த வெள்ளைக் காரன்

    நல்லெழுத்து வந்திருச்சே
        இந்த வெள்ளைக் காரன்1

என்று ஆங்கிலேயர்களின் புகழைப் பாடுகிறது இந்தப் பாட்டு.
___________________________________________________

    1. ப. 344 : 40.