பக்கம் எண் :

ஆத

18

மலையருவி

ஆத்தோரம் கொடிக்காலாம்
        அரும்பரும்பா வெற்றிலையாம்

    போட்டால் சிவக்குதில்லை
        பொன்மயிலே உன்மயக்கம்.
              

105

கான மயிலேஉன்னைக்
        கைவிடலை என்றுசொல்லி

    வேலவர் கோயிலிலே
        வேட்டிபோட்டுத் தாண்டித்தாரேன்.
           

106

சாலை கடந்துவாடி
        சந்தைப்பேட்டை தாண்டிவாடி

    ஓடை கடந்துவாடி
        ஓடிப்போவோம் ரெங்கூனுக்கு
                 

107

நேத்துச் சமைந்தபிள்ளை
        நெய்யும்சோறும் தின்றபிள்ளை

    பார்த்துகிட்டுப் போறபிள்ளை - உன்
        பல்வரிசை பகட்டுதடி.
         

108

மூக்கெல்லாம் நீண்டபிள்ளை
        முன்னாலே போறபிள்ளை

    நாக்குச் சிவந்தபிள்ளை
        நான்தாண்டி உன்புருசன்.
                      

109

பச்சைப்பச்சைக் கொத்துமல்லி
        பகலெல்லாம் ரத்னவல்லி

    நீலவர்ணக் கொத்துமல்லி
        நிற்கட்டுமா போகட்டுமா?
            

110

சித்தாடை வாங்கித்தாரேன்
        சின்னமடி கட்டித்தாரேன்

    பார்த்துப் பொறுக்கிடுங்க
        பத்தினியே மதனியாரே.    
               

111