New Page 1
நெல்லறுக்கப் போனவளை
நிற்கவைத்துப் பாதையிலே
சொக்கத்தங்க நகைகளெல்லாம்
பக்குவமாய்ப் பூட்டிவிட்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
26
கையெடுத்த பேருக்கெல்லாம்
கைநிறையப் பணங்கொடுத்து
பைகளைத் திறக்கச்சொல்லி
பற்றாததுக்கும் போட்டுரொப்பி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
27
தங்கம்பொன் வெள்ளியெல்லாம்
தண்ணிக்குச் சமமாய்எண்ணித்
தர்மத்தை மனசில்எண்ணித்
தானதர்மம் எல்லாம்பண்ணி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
28
உள்ளுக்குஓ ராளைவிட்டு
உளவெல்லாம் அறிந்துகொண்டு
நல்லமாதிரி யேபோயி
சொல்லாலேகா செல்லாம்வாங்கி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
29
ஆறும்இல்லை நூறும்இல்லை
ஆளும்இல்லை பேரும்இல்லை
தானேதான் மச்சானோடே
தக்கபடி அடிச்சுக்கிட்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு லிங்கம்.
30
|