கன
கன்றுபோற வழியிலேநான்
- கண்மணியே
கல்கிணறு கட்டிவைத்தேன்.
60
மலடிகைத் தருமமென்று - கண்மணியே
மாடுதண்ணி குடிக்கலையே!
மாடுபோற வழிமேலேநான் -
கண்மணியே
மணிபோல வைக்கோல்போட்டுவைத்தேன்.
மலடிகைத் தருமமென்று - கண்மணியே
மாடுவைக்கோல் தின்னலையே!
ஆனிமாசம் வாங்கிவிட்ட
- கண்மணியே
அழகான பசுவும்மலடு.
குப்பையிலே மேய்ந்துவரும்
- கண்மணியே
கோழிகூடத் தான்மலடு.
65
மாமன்மச்சான் ஏசினாங்க
- கண்மணியே
மற்றவர்கள் ஏசினாங்க.
அண்ணன்தம்பி ஏசினாங்க
- கண்மணியே
அக்காஅத்தை ஏசினாங்க.
மதனிகொழுந்தி ஏசினாங்க
- கண்மணியே
சதிநினைத்துப் பேசினாங்க.
சிற்றப்பன்வீட் டாருங்கூடக்
- கண்மணியே
சிரிக்கவும் இடமானேனே!
மந்தையிலே படுத்துறங்கும்
- கண்மணியே
மாடுகன்றெல் லாம்மலடு.
70
வேலிப்பக்கம் மேய்ந்துவரும்
- கண்மணியே
வெள்ளாடெல் லாம்மலடு
காடெல்லாம் சுற்றிவரும்
- கண்மணியே
கருநாயுந் தான்மல.
என்முகத்தி லேவிழித்த -
கண்மணியே
எதிர்த்தவீட்டுப் பெண்மலடி.
அண்டைவீடெல் லாம்மலடு -
கண்ணேஎன்னை
அடுத்தவரெல் லாம்மலடு.
|