பக்கம் எண் :

32

மலையருவி

கானலிலே ரெண்டுமரம்
        கருமிளகு காய்க்கும்மரம்

    தன்னாலே காய்க்குமரம்
        தருமருடை ஏலத்தோட்டம்.
   

203

பொட்டியிலே பழமும்இல்லை
        பழமெடுக்க மனமும்இல்லை

    சாக்கிலே போடச்சொல்லிச்
        சவட்டுறாராம் முதலாளி.
                   

204

சிட்டம்பாறைத் தோட்டத்திலே
        சேர்ந்துகளை வெட்டையிலே

    அகழுக்குள்ளே நின்னுக்கிட்டு
        அனத்துதம்மா கொம்பானை.
     

205

சக்குவெள்ளைத் தோட்டத்திலே
        சக்கிலியாள் வேலையிலே

    மாட்டுக்கறி இல்லாமே
        மயங்குதம்மா கேப்பைக்களி.
             

206