|
| சுற்றினோம் மதுகரையில் பாண்டியனா |
| ரெல்லைமுதல் பார்த்து வந்தோம் |
| |
| இத்தனையும் தேடிவந்து மென்மகன் |
| காத்தவனைக் கண்ட தில்லை, |
| |
| கொத்துமலர் பூத்துநிற்கும் கோனாடு |
| தேசமதைக் கோலு வோமே |
| |
| வசனம் : ஆகோ வாருங்கள் சேவகர்களே, திரிசிரபுரத்திற்கு மேற்கு, மதுகரைக்கும் கிழக்கு தேடிப் பார்த்ததிலே காத்தவனைக் கண்ணிலே காணோம். பட்டணத்தைப் பார்ப்போம் வாருங்கள். |
| நடை |
| சிங்காரத் தோட்டம் செந்நெல் பயிர்நிலங்கள் |
| மங்காத பூஞ்சோலை வாழை கமுகுபிலா |
| |
| செங்கரும்பு மஞ்சளிஞ்சி தெங்குபிலா பின்னைவனம் |
| குங்குமம் செவ்வலரி குளங்கள் தடங்கள் |
| |
| மலைகள் குகைகளெலாம் அலைந்து மிகப்பார்த்து |
| வலையில் அகப்பட்ட மான்போலவே மயங்கி |
| |
| தன்னுடன் வரும்படையை தான்பார்த்து ஏதுசொல்வான் |
| |
| வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே திரிசிரபுரம் முழுவதும் தேடிக் காத்தவனைக் கண்ணில் காணோம். இனிமேல் திரிசிரபுரத்திற்கு கிழக்கு, தஞ்சை நகர்க்கு மேற்கு புதுக்கோட்டைக்கும் வடக்கு, காவேரிக் கரைக்கும் தெற்கும் இதற்கு உட்பட்ட கிராமங்களையெல்லாம் தேடுவோம் தூதர்களே. |
| நடை |
| கோனாடு முல்லக்குடி குவளகுடி ஒட்டக்குடி |
| வானாடும் மேலசிந்தாமணி தேவஸ் தானமுதல் |
| |
| நன்றுலவு தாராநல்லூர் நல்லஇடைத் தெருவும் |
| வற்றாத பொய்கை மஞ்சுத்திடல் வேங்கூரும் |
| |
| சென்னெல் நதிபரவும் திருவரம்பூர் வீதிவிடங்கம் |
| கன்னலில் முத்தீனும் கலமலைப்பா குறிச்சி |