|
சுற்றினோம் மதுகரையில் பாண்டியனா |
ரெல்லைமுதல் பார்த்து வந்தோம் |
|
இத்தனையும் தேடிவந்து மென்மகன் |
காத்தவனைக் கண்ட தில்லை, |
|
கொத்துமலர் பூத்துநிற்கும் கோனாடு |
தேசமதைக் கோலு வோமே |
|
வசனம் : ஆகோ வாருங்கள் சேவகர்களே, திரிசிரபுரத்திற்கு மேற்கு, மதுகரைக்கும் கிழக்கு தேடிப் பார்த்ததிலே காத்தவனைக் கண்ணிலே காணோம். பட்டணத்தைப் பார்ப்போம் வாருங்கள். |
நடை |
சிங்காரத் தோட்டம் செந்நெல் பயிர்நிலங்கள் |
மங்காத பூஞ்சோலை வாழை கமுகுபிலா |
|
செங்கரும்பு மஞ்சளிஞ்சி தெங்குபிலா பின்னைவனம் |
குங்குமம் செவ்வலரி குளங்கள் தடங்கள் |
|
மலைகள் குகைகளெலாம் அலைந்து மிகப்பார்த்து |
வலையில் அகப்பட்ட மான்போலவே மயங்கி |
|
தன்னுடன் வரும்படையை தான்பார்த்து ஏதுசொல்வான் |
|
வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே திரிசிரபுரம் முழுவதும் தேடிக் காத்தவனைக் கண்ணில் காணோம். இனிமேல் திரிசிரபுரத்திற்கு கிழக்கு, தஞ்சை நகர்க்கு மேற்கு புதுக்கோட்டைக்கும் வடக்கு, காவேரிக் கரைக்கும் தெற்கும் இதற்கு உட்பட்ட கிராமங்களையெல்லாம் தேடுவோம் தூதர்களே. |
நடை |
கோனாடு முல்லக்குடி குவளகுடி ஒட்டக்குடி |
வானாடும் மேலசிந்தாமணி தேவஸ் தானமுதல் |
|
நன்றுலவு தாராநல்லூர் நல்லஇடைத் தெருவும் |
வற்றாத பொய்கை மஞ்சுத்திடல் வேங்கூரும் |
|
சென்னெல் நதிபரவும் திருவரம்பூர் வீதிவிடங்கம் |
கன்னலில் முத்தீனும் கலமலைப்பா குறிச்சி |