|
தேட்டமுடன் குருதாரம் தன்னைத்தீண்டி |
திறமுடைய சந்திரனும் குறைந்துபோனான் |
|
வாட்டமுள்ள ராவணனும் பெண்ணாலேதான் |
மாண்டதையும் கேட்டிடுவீர் மன்னவனே |
|
|
செய்யாதேதும் செய்தேனோ சேரைத் திறந்தேனோ |
வையகத்தில் இல்லாத வன்கொடுமை செய்ததுண்டோ |
|
சட்டமுடன் ராசாவே சபைதனிலே இப்போது |
கட்டை அவிழ்ந்துவிடும் நடந்ததைச் சொல்லு கிறேன் |
|
பூட்டை முறித்தேனோ புதுக்களவு செய்தேனோ |
எட்டரைக் குள்ளே எதமாயிருந்த பெண்ணை |
|
பத்தரைக் குள்ளிருந்து பதுசைக் குறைத்தேனோ |
|
|
தவித்துவரும் மானிடர்க்கு எந்நாளும் |
நிதிகொடுத்துத் தயவு வைத்து |
|
விபத்துத்தனை யகற்றி வைக்கும் |
வீரமுடி காத்தவனை வியந்துராசன் |
|
அவிழ்த்துவிட உத்தரவு கேட்டு |
மிகசேப்பிளையான் அஸ்தம் தொட்டு |
|
கயிற்றினால் கட்டியிருந்த கட்டை |
அவிழ்த்துவிட்டான் கனிவுள் ளோனே. |
|
|
கட்டை அவிழ்த்திடவே காத்த பரிமளமும் |
சட்டமுடன் இராசாவைத் தான்பூண்டு கைதொழுது |
|
வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் |
காருமென்று காவல்தனை கட்டளையும் இட்டீர்காண் |
|
பார்தனிலே நான்காவல் பார்த்து வருகையிலே |
ஊர்தனிலே நான்காவல் உலாவி வருகையிலே |
|
கன்னியர்கள் தன்னைநான் கடைக்கண்ணால் பார்ப்பதில்லை |
பெண்களையும் நான்கண்ணால் பிரியமுடன் பார்ப்பதில்லை |
|
அறந்தழைக்கும் சுக்ரீவன் ஆக்கினைபோல் நடத்தி |
கறந்துவைத்த பால்தன்னைக் காகங் குடியாமல்21 |