|
| தேட்டமுடன் குருதாரம் தன்னைத்தீண்டி |
| திறமுடைய சந்திரனும் குறைந்துபோனான் |
| |
| வாட்டமுள்ள ராவணனும் பெண்ணாலேதான் |
| மாண்டதையும் கேட்டிடுவீர் மன்னவனே |
| |
| |
| செய்யாதேதும் செய்தேனோ சேரைத் திறந்தேனோ |
| வையகத்தில் இல்லாத வன்கொடுமை செய்ததுண்டோ |
| |
| சட்டமுடன் ராசாவே சபைதனிலே இப்போது |
| கட்டை அவிழ்ந்துவிடும் நடந்ததைச் சொல்லு கிறேன் |
| |
| பூட்டை முறித்தேனோ புதுக்களவு செய்தேனோ |
| எட்டரைக் குள்ளே எதமாயிருந்த பெண்ணை |
| |
| பத்தரைக் குள்ளிருந்து பதுசைக் குறைத்தேனோ |
| |
| |
| தவித்துவரும் மானிடர்க்கு எந்நாளும் |
| நிதிகொடுத்துத் தயவு வைத்து |
| |
| விபத்துத்தனை யகற்றி வைக்கும் |
| வீரமுடி காத்தவனை வியந்துராசன் |
| |
| அவிழ்த்துவிட உத்தரவு கேட்டு |
| மிகசேப்பிளையான் அஸ்தம் தொட்டு |
| |
| கயிற்றினால் கட்டியிருந்த கட்டை |
| அவிழ்த்துவிட்டான் கனிவுள் ளோனே. |
| |
| |
| கட்டை அவிழ்த்திடவே காத்த பரிமளமும் |
| சட்டமுடன் இராசாவைத் தான்பூண்டு கைதொழுது |
| |
| வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் |
| காருமென்று காவல்தனை கட்டளையும் இட்டீர்காண் |
| |
| பார்தனிலே நான்காவல் பார்த்து வருகையிலே |
| ஊர்தனிலே நான்காவல் உலாவி வருகையிலே |
| |
| கன்னியர்கள் தன்னைநான் கடைக்கண்ணால் பார்ப்பதில்லை |
| பெண்களையும் நான்கண்ணால் பிரியமுடன் பார்ப்பதில்லை |
| |
| அறந்தழைக்கும் சுக்ரீவன் ஆக்கினைபோல் நடத்தி |
| கறந்துவைத்த பால்தன்னைக் காகங் குடியாமல்21 |