பக்கம் எண் :

முத்துப்பட்டன்
வில்லுப்பாட்டு
47

  அனுப்பிவிடு மென்றபோது “அய்யய்யோ சிவனேயிந்த
மனுக்களி லிவரைப் போல் வடிவத்தைக் கண்டதில்லை
அனுப்புவதற்கு என்ன செய்வோம் ஆரடி பெண்கள் நீங்கள்
எனக்குமே இவர்தானாரு உண்மையைச் சொல்லு மென்றார்”
“சோல்லுமே யென்றுரைத்தீர் மன்னா துணைவனு முயர்குலந்தான்
வல்லமை யாகவேதான் மணஞ்செய்தா ரெங்களைத்தான்
கள்ளரோடு யுத்தஞ்செய்து என் கணவரு மாண்டுவிட்டார்
வள்ளலின் பாதஞ்சேர வரம்தர வேணும் நாதா”
  ஜமீன்தாரின் தீய ஆசை
  “பெண்கள் நீங்கள் சாகவேண்டாம் சொன்ன புத்திதனை சற்றேகேளும்
மங்களமதாக எந்தன் வர்ணநல்ல அரண்மனையில்
சங்கடத்தை விட்டு நீங்கள் சந்தோஷமாகி யிருங்கோ பெண்டுகாள்
நித்தமொரு பட்டுத்தி நினைத்தபடி பூ முடித்து
ஏற்றநல் பணியணிகள் உல்லாச மெத்தவுண்டும் பெண்கள்
பாயாசஞ்சோறு மருந்தி பாக்கு வெத்திலையுந் தின்று
சீலமுள்ள பெண்களுடன் சென்றிருங்கோ இன்றுமுதல்
மேனி நனையாமல் வேறு முகங் காணாமல்
சேனை தளம் சூழ்ந்திருக்கச் சிங்கா தனத்தி லிருங்கோ”
  ஜமீன்தார் உத்தரவு கொடுக்க பெண்களிருவரும் உடன்
                கட்டை ஏறல்
  அந்த மொழிதனைக் கேட்டு அலறி அபயமிட
“எங்களுடைய தலைதனிலே எழுதிவிட்டான் ஈஸ்வரனும்
மங்கிலியப் பெண்கள் நம்மை நகைப் பாரே
வாலைபகடை நம்மை இதற்கோ வருந்திப் பெற்றான்
சங்கடத்தைப் பார்ப்பதற்கோ சண்டாளி போய்வாரோம்”
என்றவர் சொல்ல துரையவர் கேட்டு
உற்றதோர் பூப்பந்தல் நேர்த்தியாய்க் கட்டி
மந்தாரை பிச்சியும் செண்பகப்பூவும் மாலையும் கொடி விதானங்கள் செய்து
கெந்தக பரிமள வாசத்துடனே கெம்பீரமாய் முத்துப்பட்டனை வைத்து
அக்காளும் தங்கையும் வாராளே பத்தினி நையாண்டி கொட்டி குரையுமிட்டு
நன்மையாகவே கட்டிடத்தில் வைத்து சந்தனக்கட்டை விறகு அடுக்கி