உன் சீமையுள்ள மட்டும் செலுத்தியே தந்தாயானால் உன் லாயத்துக் குதிரை எல்லாம் நன்றாய் எழுந்திருக்கும் உத்தன் அரண்மனைக்கும் ஒரு தீங்கும் வாராது என்று சொல்லி கோடங்கி எடுத்துரைத்தானப்போது கம்பைய நாய்க்கருந்தான் காரியமாய்த்தான் கேட்டு கோடங்கி சொன்னகுறி தப்பாது என்று சொல்லி காரியிப்பேர் மந்திரியை கடுகியே வரவழைத்து ஊருக்கு ஊரு நீங்கள் உத்தரவு தானனுப்பி சீக்கிரம் வருக வென்று சேவகரைத் தானனுப்பி ஊருக்கு ஊரு நீங்கள் உகந்திருக்கும் நாட்டாரை சீமைக்குச் சீமை சிறந்த குடி அத்தனையும் கம்பைய நாயக்கர் கனத்ததொரு சீமையெல்லாம் ஓலை கொடுத்துமங்கே ஓட விட்டார் தூதுவனை சேவகருந் தானோடி தென்னியனார் சீமையெல்லாம் ஒலைதனைக் கொண்டுபோய் உடனே அவர் கூட்டி வந்து வந்து குவித்தார்கள் மகா சேனையுள்ள தெல்லாம் கம்பைய நாய்க்கர் அவர்களை கண்ணாலே தான் பார்த்து நாட்டாரைத்தான் பார்த்து நாய்க்கரவர் ஏதுரைப்பார் |
கம்பைய்யன் பெரியக்காண்டி அம்மனுக்கும் பொன்னர் சங்கருக்கும் பூஜை செய்தல் |
கேளுங்கள் நாட்டாரே நீங்கள் கிருபையுடனிப்போது வீரமலை வெண்முடியில் வீற்றிருக்கும் மாதாவும் காராளர் பொன்னர் சங்கர் கன்னி ஒரு பெண்ணாளும் அத்தை பிள்ளை மூவருமாய் ஆனைபடை சேனையுடன் மந்திர மகாமுனியும் மலைக்காவலுடையவனும் அவர் பந்தி தளத்துடனே பாங்காக இப்போது நாளை திங்கள் கிழமை சீமையிலுள்ளோரும் புதுப்பானை தானெடுத்து பொய்கையிலே நீராடி |