| 					 ஆங்கில நாட்டுக்குச் சென்றவர்கள்-பலர்      அருமைக் குணங்களை விட்டுவிட்டுத் 					தீங்கான வழிகளில் சென்றதனால்-மிகச்      சீரழிந் தாரெனக் கூறினரே. 					 					அன்னை உரைத்ததைக் கேட்டதுமே-அவர்      அருகினில் சென்றுநம் காந்தியுமே, 					“என்னைநீ நம்பிட வேண்டுமம்மா-நான்      என்றும் ஒழுங்காய் இருப்பேனம்மா. 					 					மாமிசம் சாப்பிட மாட்டேனம்மா-தீய      வழிகளில் செல்லவே மாட்டேனம்மா. 					சாமிக்குப் பொதுவாகச் சொன்னேனம்மா-இது      சத்தியம், சத்தியம், சத்தியமே.” 					 					என்றதும் அன்னை மகிழ்ந்தனரே-உடன்      இணங்கினர் மகனை அனுப்பிடவே. 					அன்னையின் அனுமதி பெற்றதுமே-காந்தி      அளவில்லா ஆனந்தம் கொண்டனரே.  |