| 					 விருந்து முடிந்ததும் நண்பர்களில்-சிலர்      மெத்தவும் காந்தியை வாழ்த்தினரே. 					இறுதியில் பையிலே கையைவிட்டு-காந்தி      எடுத்தனர் நன்றி உரைதனையே. 					 					காகிதம் தன்னை எடுத்ததுமே-அவர்      கைகள் இரண்டும் நடுங்கினவே. 					வேகமாய் வார்த்தைகள் வந்தனவா?-இல்லை;      வேர்வை உடம்பை நனைத்ததுவே! 					 					தொண்டை அடைத்தது; மேலும் அவர்-சொன்ன      சொல்லும் உடைந்து சிதறியதே. 					நன்றி உரைதனில் என்னசொன்னார்-என்றே      நண்பரில் யாருக்கும் புரியவில்லை! 					 					நண்பர்கள் மத்தியில் பேசிடவே-அன்று      நடுங்கித் திணறிய காந்திமகான் 					அந்நிய ரும்மிகப் போற்றிடவே-பல      ஆயிரங் கூட்டத்தில் பேசிவிட்டார்!  |