பக்கம் எண் :

காட்சி - 17

தா. கண்ணன் : உனக்குச் சொந்தமான பொருள்களை நான் கலைத்தது
   குற்றம் என்கிறாய். அதனால் நீ கோபம் கொள்வது நியாயம் என்கிறாய்.
   அப்படித்தானே?

அன்னம் : ஆமாம்! அப்படித்தான்!

தா. கண்ணன் : அதாவது, ஒருவர்க்குச் சொந்தமானதை மற்றவர்
     கலைப்பது-குலைப்பது தவறு. அது பொருளுக்குரியவரை வெகுளச்
     செய்யும் என்கிறாய். இல்லையா?


அம்பலம் : ஆமாம்! ஆமாம்! அதைத்தான் அம்மா சொல்லிவிட்டாங்களே.

தா. கண்ணன் : பெண்ணே, நான் வரும்போது நீ என்ன
   செய்துகொண்டிருந்தாய்?

அன்னம் : நானா? நீ மதம் பிடித்த யானையைப்போலக் கடையில்
   நுழையும் போதா? நான் பாடிக்கொண்டிருந்தேன்.

தா. கண்ணன் : நீ பாடிய பாட்டு என் வீட்டுச் சொத்து. அதைத்
   தாறுமாறாகக் கலைத்து, அர்த்தத்தை அனர்த்தமாக்கினாய். என் செல்வம்
   இப்படிச் சீரழிவதைப் பார்த்துக்கொண்டு நான் சினம் கொள்ளாமல்
   இருக்க முடியுமா? என் கோபத்தைக் காட்டினேன். அத்தோடு

       உன் குறையையும் காட்டினேன்.

அம்பலம் : (சிரித்து) என்னது? பாட்டு உங்க வீட்டுச் சொத்தா? அவனவன்
   பொன்னையும் பொருளையும் நிலபுலத்தையும் சொத்தாகச் சேர்த்து
   வைப்பான். நீங்க பாட்டையே சொத்தா சேர்த்து வைத்துவிட்டீங்களா!