18காத்தவராயன் கதைப்பாடல்

முன்னவன் கையில் முறிகடனோ பட்டிருந்தோம்
   மின்னாளே நீயழுக வேண்டாமென” உரைத்து
 
சேனைபடை கூட்டிச் சேப்பிளையான் அப்போது
   ஆனைப்படையைப் பார்த்துச் சொல்லுவான் ஓர்வசனம்
 
சத்திபதி சித்தமுடன் உத்தரவு பெற்றருளி
   தம்பியர்கள் மூவருடன்
 
உதிர்பெற்ற கோட்டையது மேல்வாசல் வழிசென்று
   தனசேகரத் துடனே
 
சத்தர்முதல் மொழிபெற்ற உறையூர் தென்னூரோங்கு
   வளர்ப்புத்தூர் தனிலிருந்து
 
போதமுடன் வெங்கலக்கொம் புகள்பிடித்துப் புகழ்பெற்ற
   முரசு அறையவும்
 
வித்தரண சூரர்கள் வித்தரணிகள் புகழ்
   வெற்றித் தமுக்கடித்து
 
வீரானகம்ப ரசம்பேட்டை முதலாக மேல்முகம்
   சாலை வழியாய்
 
மத்தமுடி ராசாக்கள் வழக்கைப் பிரித்திடும்
   மதுகரைக்கும் கிழக்கு
 
வளர்தோகை மலைமுதல் பொன்விளைந்தாம் பட்டிவல்லம்
   தஞ்சாவூர் முதல்
 
சுத்திவர வீரர்கள் காவேரிக் கரையிலும்
   சர்க்கார் பாளையத்திலும்
 
சிறந்த தேவதானப்பட்டி திருச்சிறார் தேரோடும்
   வீதி தனிலும்
 
பக்தர்கள் பட்டிணம் தன்னிலும் பாலக்
   கரை முழுதும்
 
பரிவுடன் தாராநல்லூர் வரகநேரி பக்தர்கள்
   முத்த மதிலும்
 
நதியேவட கரைசுற்றியே தேடியும் நந்திதிரு
   வேங்கி வரையிலும்
 
நலமான அரியலூர் வயிரசெட்டி பாளையம்
   நலமுதவும் சங்கேந்தியும்
 
ஏத்தியே தன்னரசு பாதிகாவல் சீமையெங்கும்
   தேடியும் என் மகனைக் காணேனே8