|
| ஈச்சநாடு மேவும் திருநாட்டன் குளம் |
| ஆசலர்கள் போற்றும் அரியமங்கல முதலாய் |
| |
| கூத்தப்பால் நவல்பட்ட கொக்கரசன் பேட்டைமுதல் |
| வாய்த்த கிளியூரும் மாறாதவாழ்வு பெருகும் |
| |
| மாசானங்குடி பந்தாளங் கோட்டை பழைய குரிச்சி |
| நெல்விளைந்து போரேறும் நெறியுள்ள நன்னாடு |
| |
| பொன்விளைந் தான்பட்டி புதுக்கோட்டை தன்முதலாய் |
| சீருடனே கீழ்பாதி சிறந்ததொரு வல்லமுதல்10 |
| |
| ஊரெல்லாம் தேடிவந்தேனென் உத்தமனைக் காணேனே |
| சேப்பிளை சொல்விருத்தம் |
| திருச்சினாப் பள்ளிமுதல் சிறந்த |
| தொருகீழ் பாதிதேச மெல்லாம் |
| |
| விரசுடனே தேடிவந்தோம் |
| வீரமுடி காத்தவனைக் காணோம் |
| |
| தரும்பொரு ளாய்ப்பரி மணத்தை |
| தேடுவதாய் தளத்தி னோமே |
| |
| வருமெனவே சேப்பிளையான் நடுக்கரை |
| பார்ப்பதற்கு வருகின்றாரே |
| |
| வசனம் : சேவகர்களே தென்கரை முழுதும் தேடிப்பார்த்ததில் காத்தவனைக் காணாமையால் இனிமேல் நடுக்கரையைத் தேடுவோம் வாருங்கள். |
| நடை |
| பூண்டி தனிலிருந்து புகழுடனே மேற்காக |
| வேண்டியுடன் ஊர்தோறும் விதவிதமாய்த் தேடுகின்றார் |
| |
| கோவிலடி அணையும் கிளிக்கூடு கல்லணையாம் |
| தாவி யணுயணுவாய்த் தான்தேடி வாரார்கள் |
| |
| உத்தம சேரியிலும் ஓடையிலும் சோலையிலும் |
| சுத்த மயில்பரவும் தோவூர்க் கரைதனிலும் |
| |
| பனையவரம் தன்னிலும் பாங்காய் மடந்தனிலும் |
| இனைய நடுக்கரையில் இருக்கும் கிராமமெல்லாம் |