|
திருவளர் சோலை திருப்பிலா நல்துறையும் |
நறுமலர் சூழ திம்மராய சமுத்திரமாம் |
|
வெண்ணாவின்கீழே முறைத்தெழுந்த ஐம்புலிங்கம் |
கண்ணான கங்கைச் சடையன்திருச் சன்னதியும் |
|
வெள்ளித் திருமுத்தம் மேலூர் மறையவர்க்கு |
அள்ளித் தினங்கொடுக்கும் அரங்கர் திருச்சன்னதியும் |
|
மின்னல் இடிபணியும் வீரேஸ்புரத் தில்வந்து |
கன்னல் மொழியம்மாள் காமாட்சி சன்னதியும் |
|
சேனை படையுடனே சீரங்கம் தான்தேடி |
ஆனை மணிமுழங்கும் அரங்கர் திருச்சன்னதியும் |
|
அனுமார் படித்துறையும் அரங்கர்திருச் சன்னதியும் |
பெருமாள் தலைக்கோம்பை பேருள்ள ரங்கர்தலம்11 |
|
ஆதியாங் கொள்ளிடத்து அருங்கரையின் வெள்ளத்து |
ஆணலையும் பெண்ணலையும் அதிர அலம்பையிலே |
|
காண அரிதான கட்டழகன் சேப்பிளையான் |
கல்லில் அடியெடுத்தால் தப்படியில் அடியெடுப்பான் |
|
முள்ளில் அடியெடுத்தால் மேட்டில் அடியெடுப்பான் |
தண்ணீரில் அடியெடுத்தால் தப்படியில் அடியெடுப்பான் |
|
எண்ணிய இடமதில் எங்கும் அடிபார்த்து |
தலைக்கோரை நேர்கிழக்கு சரியாய் நடுக்கரையை |
|
கலக்கமறத்தேடிக் காத்தவனைக் காணாமல் |
வாடி மனம்தளர்ந்து மயங்கியே சேப்பிளையான் |
|
ஒடியே வந்து உகந்துகண்டான் ராசாவை. |
சேப்பிளை ராசனுக்கு சொல்விருத்தம் |
தென்னாடு காவேரிச் சீமையெலாம் |
தேடிவந்த தேன்நான் மன்னவனே |
|
மாலையரைக் களவெடுத்துச் சென்ற |
மகனையும் நான் காணேனே |
|
பொன்னான பூவுலகில் அவனாலே |
யானடியேன் புவியி லய்யா |
|
என்னநான் சொல்குவேன் இப்போ |
ராசனுமே எதிர் சொல்வாயே |