22காத்தவராயன் கதைப்பாடல்

திருவளர் சோலை திருப்பிலா நல்துறையும்
நறுமலர் சூழ திம்மராய சமுத்திரமாம்
 
வெண்ணாவின்கீழே முறைத்தெழுந்த ஐம்புலிங்கம்
கண்ணான கங்கைச் சடையன்திருச் சன்னதியும்
 
வெள்ளித் திருமுத்தம் மேலூர் மறையவர்க்கு
அள்ளித் தினங்கொடுக்கும் அரங்கர் திருச்சன்னதியும்
 
மின்னல் இடிபணியும் வீரேஸ்புரத் தில்வந்து
கன்னல் மொழியம்மாள் காமாட்சி சன்னதியும்
 
சேனை படையுடனே சீரங்கம் தான்தேடி
ஆனை மணிமுழங்கும் அரங்கர் திருச்சன்னதியும்
 
அனுமார் படித்துறையும் அரங்கர்திருச் சன்னதியும்
பெருமாள் தலைக்கோம்பை பேருள்ள ரங்கர்தலம்11
 
ஆதியாங் கொள்ளிடத்து அருங்கரையின் வெள்ளத்து
ஆணலையும் பெண்ணலையும் அதிர அலம்பையிலே
 
காண அரிதான கட்டழகன் சேப்பிளையான்
கல்லில் அடியெடுத்தால் தப்படியில் அடியெடுப்பான்
 
முள்ளில் அடியெடுத்தால் மேட்டில் அடியெடுப்பான்
தண்ணீரில் அடியெடுத்தால் தப்படியில் அடியெடுப்பான்
 
எண்ணிய இடமதில் எங்கும் அடிபார்த்து
தலைக்கோரை நேர்கிழக்கு சரியாய் நடுக்கரையை
 
கலக்கமறத்தேடிக் காத்தவனைக் காணாமல்
வாடி மனம்தளர்ந்து மயங்கியே சேப்பிளையான்
 
ஒடியே வந்து உகந்துகண்டான் ராசாவை.
சேப்பிளை ராசனுக்கு சொல்விருத்தம்
தென்னாடு காவேரிச் சீமையெலாம்
   தேடிவந்த தேன்நான் மன்னவனே
 
மாலையரைக் களவெடுத்துச் சென்ற
   மகனையும் நான் காணேனே
 
பொன்னான பூவுலகில் அவனாலே
   யானடியேன் புவியி லய்யா
 
என்னநான் சொல்குவேன் இப்போ
   ராசனுமே எதிர் சொல்வாயே