|
| விடியக்கதிர் எழுவதுபோல் அடியார்க்கு |
| முன்தோன்றி விளம்பு வாயே |
| |
| கலியுகவர தனேபரி மளராசனே |
| காத்த சுந்தர மய்யனே |
| |
| வலியுளமன் றினில்கப வினிலேறிட |
| மாலை தன்மண வாளனே |
| |
| புலியெனப் பாரினில் சிலையென |
| வாழ்ந்திடு மகளரு மணிமார்பனே |
| |
| உலைதனில் மெழுகென வாடினேன் |
| எந்தனுக் கருள்செய் வாயே. |
| |
| ஏறவிட்டு ஏணிதன்னை வாங்குகின்ற15 |
| மண்டலம் தன்னிலே என்னைத் |
| |
| தூரவிட்டு நிற்பதுவும் நியாயமோ |
| காத்த வனேதுலக்கமாக |
| |
| பாரைவிட் டோடிவந்து கழுவேறிப் |
| பல்லாண்டு பகர்ந்து கூறு |
| |
| சாரியிட்ட வாசியின்மேல் எழுந்துவந்து |
| நல்வாக்குச் சாற்று வாயே. |
| |
| பாலகனே உந்தனையான் பரிந்தெடுத்து |
| வளர்த்தேனப்பா பாரில் நீயும் |
| |
| சாலகனாய் மாலைதனைச் சிறையெடுக்க |
| ராசனுமே சாட்டி யென்னை |
| |
| கோலமுடன் உனைத்தேட விட்டதனால் |
| தேசமெங்கும் தேடி வந்தேன் |
| |
| ஆலமுண்ட சிவன்மகனே என்னிடரைத் |
| தீர்த்திடவும் அருள் செய்வீரே |
| |
| தீர்த்திடுவாய் எந்தனுட விபத்துத் தன்னை |
| திருவருளால் மாலைமண வாள னேகேள் |
| |
| கார்த்திடுவாய் எங்கள் குலம்தழைத் தோங்க |
| கருணைபொழிந் தருளுவது கடனு னக்கே |
| |
| பார்த்திடுவாய் எங்கள்பரி தபாந் தன்னை |
| பாரைவிட் டோடிவந்து பயனைச் சொல்லி |
| |
| ஏற்றிடுவாய் கழுவேற ஐயா இப்போ |
| இரைந்தோடி என்னெதிரே வருகு வாயே |